நாகர்கோவில், ஜூன் 9
குமரி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களான நீரோடி முதல் ராஜாக்கமங்க லம் வரை மீனவர்களின் படகுகள் ஆய்வு செய்யும் பணி நடைபெற்ற்று வருகிறது. இதற்காக மீனவர்கள் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே தங்களுடைய படகுகளை கரையோரத்தில் நிறுத்தி வைத்து சரி செய்யும் பணிகள் மற்றும் வண்ணம் தீட்டுவது போன்ற பணி களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த ஆய்வில் மீனவருடைய படகுகள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் எல்லாம் சரி யாக இருக்கிறதா, கடலுக்கு செல்லக்கூடிய அளவுக்கு தரமான முறையில் படகு உள்ளதா, காப்பீடு செய்யப்பட்டுள்ளதா, இது போன்ற எல்லாவிதமான ஆவணங்க ளை சரிபார்த்து அவர்கள் அதற்கான ஒப்புதல் செய்கின்றனர். இது ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படு கிறது. இந்த ஆய்வில் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ள படங்களுக்கு மட்டும் தான் 100 லிட்டர் மண்எண்ணை மானி யத்தில் வழங்கப்படுகிறது.
கடலுக்கு சென்ற பிறகு ஏதாவது நேரிட்டால் அவர்களுக்கான உதவித்தொகைகள் வழங்குவது போன்ற வற்றிற்கு இது முக்கியமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.