திருச்சிராப்பள்ளி, அக். 21- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க திருச்சி மாவட்ட 15 ஆவது மாநாடு சனிக்கிழமை அன்று திருச்சியில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பால்பாண்டி சங்க கொடியை ஏற்றி வைத்து மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். அஞ்சலி தீர்மா னத்தை மாவட்ட துணைத் தலைவர் ஜீவானந்தம் வாசித்தார். மாநில துணைத் தலைவர் செல்வராணி அகில இந்திய அரசு ஊழியர் சம்மே ளன கொடியை ஏற்றி வைத்து துவக்க உரையாற்றினார். வேலை அறிக்கையை மாவட்டச் செயலாளர் பாபு வாசித்தார். வரவு செலவு அறிக் கையை மாவட்டப் பொருளாளர் சிவசங்கர் சமர்ப்பித்தார். மகளிர் துணைக் குழு அறிக்கையை மகளிர் துணைக்குழு அமைப்பாளர் (பொ) அமுதவள்ளி வாசித்தார். பணி ஓய்வு பெற்ற மாவட்ட மகளிர் துணைக் குழு அமைப்பாளர் சத்திய வாணி கௌரவித்து பாராட்டப்பட்டார். தமிழ்நாடு வருவாய்த்துறை அலு வலர் சங்க மாநிலத் தலைவர் சுட லையாண்டி சிறப்புரையாற்றினார். சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் செந்தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் ஆரோக்கியராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநாட்டில், புதிய ஓய்வூதியத் திட் டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூ தியத் திட்டத்தை மீண்டும் அமல் படுத்த வேண்டும்; கொரோனாவை காரணம் காட்டி நிறுத்தி வைக்கப் பட்ட 14 விழுக்காடு அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்; சத்துணவு திட்டத்தில் காலியாக உள்ள பணி யிடங்களில் இருபாலரும் பணிய மர்த்தப்பட வேண்டும். நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்கால மாக வரன்முறை செய்து ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. மாநாட்டில் புதிய நிர்வாகிகளாக மாவட்ட தலைவராக கா.பால்பாண்டி, மாவட்ட செயலாளராக சோ. நவ நீதன், மாவட்ட பொருளாளராக கா. சிவசங்கர் உள்பட 13 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது. சங்க மாநில பொருளாளர் பாஸ் கரன் நிறைவுறையாற்றினார். முன்ன தாக சங்க மாவட்ட துணை தலைவர் வெங்கடேசன் வரவேற்றார். முடிவில் மாவட்ட இணை செயலாளர் அல்போன்சா நன்றி கூறினார்.