திருச்சிராப்பள்ளி, ஜூன் 15-
திருச்சி -தஞ்சை தேசிய நெடுஞ்சாலை யில் சர்வீஸ் சாலை அமைக்காத கார ணத்தால் இதுவரை 1000-க்கும் மேற்பட் டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன் உயர் நீதிமன்றத்தில் சர்வீஸ் சாலை மீட்புக் குழு தொடுத்த வழக்கில் மாநில அரசு உட னடியாக திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ் சாலையில் பழைய பால் பண்னை முதல் துவாக்குடி வரை சாலையின் இரண்டு புறமும் சர்வீஸ் சாலைக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தி தேசிய நெடுஞ்சாலைக்கு வழங்கிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து நில அளவை நடந்து தேவையான இடங்களுக்கு இரண்டு புறமும் குறியீடு செய்து சம்பந்தப்பட்ட கட்டிட மற்றும் நில உரிமையாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பின்னர் இது வரை எந்த மேல் நடவடிக்கையும் இல்லா மல் வியாபாரிகள் ஒரு சிலரின் வேண்டு கோளுக்கு தமிழக அரசு செவிசாய்த்து உயர்நீதிமன்ற உத்தரவை அப்பட்டமாக மீறியுள்ளது.
அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை யும், தேர்தலின் போது இன்றைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடுத்த வாக்குறுதி யை கண்டு கொள்ளாத நிலை உள்ளது. தமி ழக அரசு ஒரு சில கட்டிட உரிமையாளர் களுக்கு ஆதரவானதா? வாக்களித்த மக் கள் பக்கமா? என்பதை தெளிவுபடுத்திட வேண்டும்.
எனவே, பழைய பால்பண்னை முதல் துவாக்குடி வரை சாலையின் இரண்டு புற மும் சர்வீஸ் சாலை அமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களை திரட்டி பெரும் போராட்டத்தை விரைவில் முன்னெடுக்கும் என மாநகர் மாவட்டச் செய லாளர் எம்.ராஜா தெரிவித்துள்ளார்.