திருவாரூர், செப்.16 - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 40 வது மாவட்ட பேரவை திருவாரூரில் நடைபெற்றது. பேரவைக்கு மாவட்டத் தலைவர் வெ.சோமசுந்தரம் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் எஸ்.கோதண்டபாணி துவக்க உரை யாற்றினார். மாவட்டச் செயலாளர் செ. பிரகாஷ் வேலையறிக்கை வைத்தார். மாவட்டப் பொருளாளர் எஸ்.செங்குட்டு வன் வரவு-செலவு வாசித்தார். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மறுக்கப்படும் அகவிலைப்படி, முடக்கப்பட்ட சரண் விடுப்பை உடனே வழங்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சிகளில் நிரந்தரப் பணியிடங்களை அழித்திடும் அர சாணை 152-ஐ ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் அமல்படுத்த வேண்டும். அரசு துறையில் ஒப்பந்தம், தினக் கூலி, அவுட்சோர்சிங் முறைகளை ரத்து செய்து காலமுறை ஊதியத்தில் உடனடி யாக காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், எம்ஆர்பி செவிலியர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்களை நிரந்தரப்படுத்தி கால முறை ஊதியம் வழங்க வேண்டும். கரு வூலத்துறை உள்ளிட்ட அரசுத்துறை கள் பயன்படுத்தும் மென்பொருள் திட்டங் களை தனியார் வசம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டத்தின் புதிய தலைவராக வெ.சோமசுந்தரம், மாவட்டச் செயலா ளராக செ.பிரகாஷ், மாவட்டப் பொரு ளாளராக எஸ்.செங்குட்டுவன் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலத் தலைவர் மு.அன்பரசு நிறைவுரை யாற்றினார்.