ஆதாரை இலவசமாக புதுப்பிக்க கடைசி நாள் டிச.14
புதுதில்லி, டிச.10- ஆதார் அட்டையை இலவச மாக புதுப்பிப்பதற்கான கால அவ காசம் டிசம்பர் 14ஆம் தேதியுடன் முடிவடைகிறது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதாரை புதுப்பிக்க வேண்டும் என்று இந்திய தனித்துவ அடை யாள ஆணையம் (யுஐடிஏஐ) பரிந்துரைத்திருந்தது. இதற்கு முன்னதாக செப்டம்பர் 30ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட் டிருந்தது. ஆனால், அது மீண்டும் டிசம்பர் 14 வரை நீட்டிக்கப்பட்டு இலவச புதுப்பித்தலுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆதாரை ஆன்லைனில் அல்லது நேரடியாக இ.சேவை மையங்கள் மூலம் புதுப்பிக்க லாம். கேரளத்தில் இ.சேவை மையங்களான அக்சய கேந்தி ராக்கள் மூலம் ஆதாரை புதுப்பிக்க ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படு கிறது. எனது ஆதார் போர்டல் மூலம் புதுப்பித்தல் செய்யப்பட வேண் டும். தேவையான ஆவணங்கள் மற்றும் தகவல்களை போர்ட்ட லில் பதிவேற்றுவதன் மூலம் புதுப் பித்தலை முடிக்க முடியும். 15 வயதுக்கு முன் ஆதார் எடுத்த குழந்தைகள், 15 ஆண்டுகள் நிறை வடைந்தவுடன் பயோமெட்ரிக் தக வல்கள் உட்பட ஆதாரை புதுப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மிக்ஜம் புயல் பாதிப்பு சிறு, குறு வியாபாரிகளுக்கு மின் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க கோரிக்கை
பாபநாசம், டிச.10- சிறு, குறு வியாபாரி களுக்கு மின் கட்டணத்தி லிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சியின் தலை வரும், பாபநாசம் எம்.எல்.ஏ. வுமான ஜவாஹிருல்லா கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “மிக்ஜம் புயலால் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டா ரப் பகுதிகளில் சிறு, குறு வியாபாரிகள், தெருவோர வியாபாரிகள், மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித் துள்ளனர். தங்களது தொழில் கருவிகள், வாக னங்கள் முதலியவற்றை இழந்துள்ளனர். இவர்களில் அதிகமா னோர் எந்தவித காப்புறு தியும் செய்யாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் மீண்டும் தங்களது தொ ழிலை தொடங்கவும், இழப்பு களிலிருந்து மீண்டு வரவும் முதலமைச்சர் உதவிக் கரம் நீட்ட வேண்டும். சுமார் ரூ.11 ஆயிரம் கோடி அள வுக்கு வணிக இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டிச.18 வரை மின் கட்டணம் செலுத்த மின்சாரத் துறை அமைச்சர் அவகாசம் அளித்திருக்கிறார். மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், சிறு, குறு வியா பாரிகளுக்கு மின் கட்ட ணத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.
வீடு, மனையில்லாத மாற்றுத் திறனாளிகளுக்கு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு வழங்க வலியுறுத்தல்
தஞ்சாவூர், டிச.10 - தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ஒன்றியம் கிளைத் தலைவர், செய லாளர்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ஒன்றிய பொறுப்பாளர் மணி கண்டன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன், மதுக்கூர் ஒன்றியத் தலைவர் எம்.பாலசுப்பிரமணி யன் ஆகியோர் பேசினர். இக்கூட்டத்தில், “பட்டுக் கோட்டை ஒன்றியத்தில் உள்ள சொந்த இடம், வீடு இல்லாத மாற்றுத்திறனாளிகள் குடும்பங் களுக்கு, அரசால் கட்டிக் கொடுக் கப்படும் குடிசை மாற்று வாரி யத்தில் வீடு ஒதுக்கீடு செய்து தர வேண்டும். பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில், மாற்றுத்திறனாளி கள் பயன்படுத்தக் கூடிய வகை யில் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும். உதவித்தொகைக் காக மனு கொடுத்து காத்திருப் போர் பட்டியலில் உள்ள அனை வருக்கும் உடனடியாக உதவித் தொகை வழங்கிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மதுக்கூர் மதுக்கூர் ஒன்றியம், கருப்பூர் கிராமத்தில் சங்கத்தின் கொடியேற்று நிகழ்ச்சி நடை பெற்றது. இதில், ஒன்றியத் தலை வர் எம்.பாலசுப்பிரமணியன், ஒன்றியச் செயலாளர் சி.ஏ.சந்திர பிரகாஷ், பன்னீர்செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். திருவோணம் திருவோணம் ஒன்றியம் சோழ கன்கரை கிளைக் கூட்டம், கிளைத் தலைவர் பாப்பம்மாள் தலைமை யில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோ வன், ஒன்றியச் செயலாளர் கோவி.ராதிகா கலந்து கொண்ட னர். இதில், மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் செய்ய கூட்டுறவு வங்கிகளில் தாமதமின்றி கடன் வழங்க வேண்டும். வீடற்றவர் களுக்கு கான்கிரீட் வீடு கட்டித்தர வேண்டும்” என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
ராட்சத அலை மோதியதால் கடலில் தவறி விழுந்து மீனவர் பலி
தூத்துக்குடி,டிச.10- தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை தெற்கு தெரு வைச் சேர்ந்தவர் ஆனந்த் (36). இவருக்கு சொந்தமான பைபர் படகில் இவரும், அதே ஊரைச் சேர்ந்த ஜூலியஸ் மகன் ரவிஸ்டன் (30) என்பவரும் சனிக் கிழமை பகலில் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். சுமார் 5 கடல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கடலில் திடீரென்று எழுந்த ராட்சத அலை படகு மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய ரவிஸ்டன் கடலில் தவறி விழுந்தார். இதனால் ஆனந்த், அவரை காப்பாற்ற கடலில் குதித்தார். இதை பார்த்து அங்கு மீன்பிடித்துக் கொண்டு இருந்த சக மீன வர்களும் அங்கு விரைந்து சென்றனர். அவர்களின் உதவியோடு ரவிஸ்டனை மீட்டு கடற்கரைக்கு கொண்டு வந்தனர். ரவிஸ்டனை உடனடியாக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ரவிஸ்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆலந்தலை கடலோர பாது காப்பு குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொப்பரை தேங்காய்களை வெளிச் சந்தையில் விற்பதா?
தென்னை விவசாயிகள் எதிர்ப்பு
தஞ்சாவூர், டிச.10 - நாபெட் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்து வைத்துள்ள கொப்பரை தேங்காய் களை, ஒன்றிய அரசு வெளிச் சந்தையில் விற்பனை செய்வதற்கு தென்னை விவ சாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாபெட் நிறுவனம் மூலம் டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்துள்ள ஒரு லட்சம் மெட்ரிக். டன் கொப்பரை தேங் காய்களை, ஒன்றிய அரசு வெளிச் சந்தை யில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தேங்காய் விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள தென்னை விவசாயி களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும். மாற்றாக கொப்பரை தேங்காய்களை எண்ணெயாக மதிப்புக்கூட்டி விற்பனை செய்யலாம் என தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தென்னை விவசாயி முடப்புளிக்காடு மா.கணபதி கூறுகை யில், “ஒன்றிய அரசு கொள்முதல் செய்து வைத்துள்ள கொப்பரை தேங்காய்களையும், இனி கொள்முதல் செய்ய உள்ள கொப்பரை தேங்காய்களையும் எண்ணெயாக மாற்றி அங்காடிகள் மூலமாகவோ அல்லது மானிய விலையிலோ விற்பனை செய்தால் விவசாயி களின் வாழ்வாதாரம் பாதிக்காது” என்றார்.
கார் கவிழ்ந்து விபத்து
விருதுநகர், டிச.10- கேரளா மாநிலம் காவ நாத் மாவட்டம் கேரா நகரைச் சேர்ந்த ஜோஸ் அலெக்ஸ் என்பவரது மகன் சாமு வேல்ஜோஸ் (21). இவர், பா ண்டிச்சேரியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், அவர் தனிக் காரில், திருவனந்த புரத்திலிருந்து பாண்டிச் சேரி நோக்கி சென்று கொண்டிருந்தார். வடமலைக் குறிச்சி சந்திப்பு அருகே வந்தபோது, காரின் டயர் திடீரென பஞ்சராகியதாக கூறப்படுகிறது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளா னது. இதில் சாமுவேல்ஜோஸ் எவ்வதி காயமும் ஏற்படாமல் தப்பினார். ஆனால், இந்த விபத்தில் கார் சேதம டைந்தது. இதனால், 4 வழிச் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. சம்பவ இடத் திற்கு விரைந்து வந்த மேற்கு காவல் நிலைய போலீசார், சேதமான காரை அப்புறப்படுத்தினர்.
பழைய இரும்புக் கடையில் தீவிபத்து
விருதுநகர், டிச.10- விருதுநகர் சேக்கிழார் தெருவை சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கு சொந்தமான பழைய இரும்புக் கடை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ளது. இதில் சனிக்கிழமையன்று அதிகாலை 3 மணிக்கு திடீரென தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து, அக்கம்பக்கத்தினர், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்த னர். விரைந்து வந்த, தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தில் கடையில் இருந்த சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. விபத்து குறித்து விருதுநகர் மேற்கு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் நவீன தீவிர சுவாச சிகிச்சைப் பிரிவு
தேனி, டிச.10- தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் நவீன தீவிர சுவாச பிரிவு சனிக்கிழமை தொடங்கப்பட்டது. அரசு தேனி மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் மயக்கவியல் துறையின் கீழ், பொது மருத்துவத்துறையின் ஒத்துழைப் போடு நவீன தீவிர சுவாச சிகிச்சைப் பிரிவை தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலசங்கர் தொடங்கி வைத்தார். 10 படுக்கைகள் கொண்ட இப்பிரிவு செயற்கை சுவாசம் அளிக்கும் கருவிகள், மானிட்டர்கள், இன்பியூசன் பம்ப், டிபிப்ரிலேட்டர், மைய ஆக்சிஜன் மற்றும் சக்ஷன் ஆகிய நவீன மருத்துவ வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் பால சங்கர் பேசுகையில், மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு சுமார் 160 விஷம் அருந்திய நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சுமார் 25 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கி றார்கள். பாம்பு கடிக்கு மாதம் சுமார் 70 பேர் சிகிச்சை பெற்றாலும், 3-4 நோயாளிகள் உயி ரிழக்க நேரிடுகிறது. மாதத்திற்கு சுமார் 10 பேர் தூக்குப் போட்டு தற்கொலை முயற்சியில் இறங்கி அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களில் சுமார் 5 பேர் உயிரிழக்கின்றனர். விஷக்கடி மற்றும் தற்கொலை முயற்சியில் ஈடு படுபவர்கள் பெரும்பாலும் இளம் அல்லது நடுத்தர வயதினர்களாகவே உள்ளனர். அவர்களில் செயற்கை சுவாசம் தேவைப்படுபவர்களுக்காக பிரத்யேக மாக அனைத்து உயிர்காக்கும் கருவிகள் மற்றும் 24 மணி நேர மருத்துவர், செவிலி யர் சிறப்பு கண்காணிப்பும் உள்ளது. இதன் மூலம் பல இளம் உயிரிழப்புகளை தவிர்க்க லாம்’’ என்றார். நிகழ்வில், மருத்துவமனை துணைக் கண்காணிப்பாளர் செல்வகுமார், நிலைய மருத்துவ அலுவலர் சந்திரா, மயக்க வியல் துறைத்தலைவர் கண்ணன், மருத்து வத்துறை பேராசிரியர் வெங்கடேஷ் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த மருத்துவர் களும், செவிலியர்களும் பங்கேற்றனர்.
அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20 லட்சம் மோசடி கணவன், மனைவி மீது வழக்குப் பதிவு
விருதுநகர், டிச.10- விருதுநகர் அருகே உள்ள மிளகாய்பட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (32). அரியலூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவரது உறவினரான மாரிச்சாமி என்பவர் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை செய்கிறார். இவர்களிடம், மிளகாய்பட்டியைச் சேர்ந்த பாக்கிய லட்சுமி, தான் கோவையில் ஆசிரியையாக வேலை செய்வ தாகவும், தனது கணவர் அன்புசிவா சென்னையில் பேராசிரி யராகவும் துறைத் தலைவராகவும் பணிபுரிவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தங்களுக்கு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ளதாகவும் இருவரும் தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ.20 லட்சம் கொடுத்தால் அரசு வேலை வாங்கித் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். எனவே, பாலமுருகன் மற்றும் மாரிச்சாமி ஆகியோர் ரூ.20 லட்சத்தை அன்புசிவா கூறிய வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளனர். ஆனால், சொன்னபடி அரசு வேலை வாங்கித் தரவில்லை. எனவே, பணத்தை இருவரும் திருப்பிக் கேட்டதற்கு, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படு கிறது. இதையடுத்து, பாலமுருகன், முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் செய்தார். ஆனால், பணத்தை பெற்றவர்கள் காவல்துறை அழைப்பாணை அனுப்பியும் விசாரணைக்கு வரவில்லை. இதையடுத்து, வழக்குப் பதிவு செய்து பாக்கியலட்சுமி மற்றும் அன்புசிவாவைத் தேடி வருகின்றனர்.