districts

ரயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி ஏப்.24-இல் பேராவூரணி ரயில் நிலையம் முற்றுகை

பேராவூரணி, ஏப்.20-

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நகர  வர்த்தகர் கழக அலுவலகத்தில், வர்த்தகர் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்  தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன் தலைமை யில் நடைபெற்றது.  

    செயலாளர் எஸ்.திருப்பதி வரவேற்றார். கட்டுப்பாட்டு கமிட்டி உறுப்பினர்கள் பாரதி  வை.நடராஜன், பி.எஸ்.அப்துல்லா, ஆர். வெங்கடேசன் மற்றும் துணைத் தலை வர்கள், துணைச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் எல்.ஏ.எம்.சாதிக் அலி நன்றி கூறினார்.  

    கூட்டத்தில், ‘‘பேராவூரணி ரயில் நிலையத் தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று, பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல  வேண்டும் என்று வலியுறுத்தி, ரயில்வே அலு வலர்களுக்கு பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

   அனைத்து ரயில்களும் நின்று செல்ல நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஏப்ரல் 24  அன்று ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு  போராட்டம் நடத்துவது, பேராவூரணி கடை வீதியில் திருநங்கைகள் தொல்லையை கட்டுப் படுத்த காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.