பாபநாசம், நவ.24 - தென்னக ரயில்வேயின் மெயின் லைன் பாதை என்ற பெரு மைக்குரிய, தஞ்சைக்கும் விழுப்புரத்திற்கும் இடையே உள்ள இருப்புப் பாதை 147 ஆண்டு களுக்கும் மேல் பழமை வாய்ந்தது. விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் ஆகிய 4 மாவட்ட எல்லைகள் வழியாக இந்த இருப்பு பாதை செல்கிறது. மேலும் இந்த ரயில் நிலையங்கள் வழியே நாளொன்றுக்கு சுமார் 25,000-க்கும் மேற்பட்டோர் பய ணித்து வருகின்றனர். இவற்றில் தஞ்சாவூர் - விழுப்புரம் போன்ற ரயில் நிலை யங்கள் NSG-3 என்ற தர வரிசையி லும், கும்பகோணம், மயிலாடு துறை, சிதம்பரம் போன்ற ரயில் நிலையங்கள் NSG-4 என்ற தர வரிசைகளிலும் உள்ளன. இந்த ரயில் நிலையங்களின் பயணியர் பயணச்சீட்டு மற்றும் சரக்கு போக்குவரத்து கட்டணம் வாயி லாக, ஆண்டுக்கு சுமார் 100 கோ டிக்கும் மேலான வருமானத்தை தென்னக ரயில்வே பெற்று வரு கிறது. இந்த இருப்புப் பாதையில்தான் உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவில், தாராசுரம் ஐரா வதீஸ்வரர், மகாமகம் திருவிழா, கும்பகோணம் கும்பேஸ்வரர் திருக்கோவில், கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் நவக்கிரக கோயில்கள், புகழ்பெற்ற சைவ, வைணவ திருத்தலங்கள் உள்ளன. இத்திருத்தலங்களுக்கு நாடெங்கி லும் இருந்து நாள்தோறும் ஆயி ரக்கணக்கான ஆன்மீகச் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் ரயில் பயணத்தையே நம்பி வருகின்ற னர். தற்சமயம் தஞ்சை - விழுப்புரம் ரயில் பாதையில் விரைவு மற்றும் பயணிகள் ரயில்கள், சரக்கு ரயில்கள் உள்பட நாளொன்றுக்கு 60-க்கும் மேற்பட்ட ரயில் வண்டிகள் இயங்கி வருகின்றன. இதனால் தண்டவாளங்களின் ஓடும் திறன் (Running Capacity) 104 சதவீதத்திற்கும் மேலாக இருக்கிறது என்பது ரயில்வே நிர்வாகத்தின் தகவல். இது அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படு கிறது. குறிப்பாக பேரளம் - காரைக்கால் புதிய ரயில் பாதை திறக்கப்பட்டவுடன் ரயில் தண்ட வாளங்களின் ஓடும் திறன் கணிச மாக அதிகரிக்கும். 193 கி.மீ. தொலைவு கொண்ட தஞ்சை - விழுப்புரம் இருப்புப் பாதை தற்சமயம் ஒற்றைவழிப் பாதையாக இருப்பதால், நாள்தோறும் 50-க்கும் மேற்பட்ட ரயில்கள், பல்வேறு இடங்களில் எதிர்திசையில் வரும் வண்டிகள் மாறி செல்வதற்காக (Crossing) காத்திருக்க வேண்டியுள்ளது. மேற்படி காரணத்தால் ரயில்க ளின் பயண நேரம் கூடுவதுடன், பயணிகளுக்கு தேவையற்ற கால தாமதம் ஏற்படுகிறது. எனவே, தற்சமயம் உள்ள ஒற்றைவழி பாதை, இரட்டைவழிப் பாதை யாக மாற்றப்பட்டால் மட்டுமே கூடுதலாக ரயில்களை இயக்க முடியும். இது சம்பந்தமாக தென்னக ரயில்வே நிர்வாகத்திடம், தஞ்சை - விழுப்புரம் இடையே உள்ள ஒற்றைவழி இருப்பு பாதையை, இரட்டை வழிப் பாதையாக மாற்றம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி, கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக தஞ்சை மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கம், பாப நாசம் ரயில் பயணிகள் சங்கம், கும்பகோணம் வணிகர் சங்க பேரமைப்பு மற்றும் தஞ்சைப் பகுதி பயணியர் சங்கம் மற்றும் பல்வேறு சமூகநல அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றன. இந்நிலையில் பல்வேறு காலக் கட்டங்களில் அப்போதைய மற்றும் இப்போதைய நாடாளு மன்ற உறுப்பினர்கள் மத்திய ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே வாரியத்திடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக ரயில்வே நிர்வாகத்தினர், இறுதிகள ஆய்வு முடிக்கப்பட்டு (Final Location Survey) வாரியத்திற்கு அனுப்பப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். ஆனால் நடவடிக்கைகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. 2028 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் தென்னகத் தின் கும்பமேளா என்ற பெரு மைக்குரிய மகாமகம் திருவிழா விற்கு சுமார் 50 லட்சம் மக்கள் வருகை தருவர் என ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது. எனவே, அதற்கு முன்பாக தஞ்சை-விழுப்புரம் பாதை இரட்டை வழிப் பாதையாக மாற்றப்பட்டால்தான் அதிகப்படியான மற்றும் தொலை தூர ரயில்களை இயக்க முடியும். டெல்டா பகுதி பயணிகளின் நீண்ட கால கோரிக்கையான தஞ்சை - விழுப்புரம் இரட்டை வழிப் பாதைக்கு தேவையான நிதி ஒதுக்கீட்டினை இந்த ஆண்டி லேயே பெற டெல்டா பகுதி நாடாளு மன்ற உறுப்பினர்கள் விரைந்து ஆவன செய்ய வேண்டும். இதற்கான தொடர் முயற்சியில் பாப நாசம் ரயில் பயணிகள் சங்கச் செயலர் சரவணன் ஈடுபட்டுள்ளார்.