பட்டுக்கோட்டை, ஏப்.25-
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டா ரத்தில் சூரப்பள்ளம் கிரா மத்தில் தென்னையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறித்த செயல் விளக்கம் மற்றும் மேலாண்மை ஆய்வு முகாம் வேளாண்மை-உழ வர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்க லைக்கழகம் இணைத்து நடத்த உள்ளது. இந்தச் செயல் விளக்கத் தில் வேளாண் உழவர் நலத் துறை உயர் அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானி கள் கலந்து கொண்டு நடத்த உள்ளனர்.
இந்தச் செயல் விளக்கம் மற்றும் மேலா ண்மை ஆய்வு முகாம் சூரப்பள்ளம் கிராமத்தில் உள்ள அய்யா தியேட்டர் பாலு தென்னந்தோப்பில், ஏப்.27 வியாழனன்று காலை பத்து மணி அளவில் நடை பெறுகிறது.
இதில், பட்டுக்கோட்டை வட்டாரத்தில் உள்ள தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் சந்தே கங்களை தீர்த்துக்கொண்டு பயனடையுமாறு பட்டுக் கோட்டை வேளாண் உதவி இயக்குநர் எஸ்.மாலதி கேட்டுக் கொண்டுள்ளார்.