அரியலூர், ஆக.18 -
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்துள்ள தத்தனூர் மீனாட்சி இராமசாமி கல்வி நிறு வனங்களின் சார்பாக பேராசிரியர்களுக்கு புத்தாக்கம் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவ னங்களின் தாளாளர் எம்.ஆர். இரகுநாதன் தலைமை வகித்தார். இயக்குநர் முனைவர் ஆர்.இராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார். முதல்வர் முனைவர் எஸ்.சேகர் வரவேற்புரை ஆற்றினார். பாரதியார் பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினர் ஆதலையூர் சூரியகுமார் சிறப்புரையாற்றினார். துணைமுதல்வர் பி.சங்கீதா நன்றி கூறினார்.