districts

img

தஞ்சை வனக்கோட்டத்தில் 2.70 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி

தஞ்சாவூர், ஆக.31 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள செருவாவிடுதி காப்புக் காடு (மத்திய நாற்றங்கால் பண்ணை) பகுதியில் தமிழ்நாடு வனத்துறை, தஞ்சா வூர் வனக்கோட்டம், பட்டுக்கோட்டை வனச்சரகம் சார்பில், தமிழ்நாடு பல்லுயிர்  பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற் கான பசுமையாக்கும் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் நடவு துவக்க விழா நடைபெற்றது.  பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் ஏ.எஸ். சந்திரசேகரன் வரவேற்றார். செரு வாவிடுதி தெற்கு ஊராட்சி மன்றத் தலை வர் தங்க.ராமஜெயம், செருவாவிடுதி வடக்கு ஊராட்சி மன்ற தலைவர் டி.விஜய ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி தலைமை வகித்து பேசுகை யில், “பருவநிலை மாற்றத்தால் புவி வெப்ப மயமாதல் அதிகரித்து வருகிறது. இத னால் தமிழ்நாடு வனத்துறை சார்பில், லட்சக்கணக்கான மரக்கன்றுகள் நட  திட்டமிடப்பட்டுள்ளது. தஞ்சை வனக்கோட் டத்தில் 2 லட்சத்து 70 ஆயிரம் மரக்கன்று களும், அவற்றில் பட்டுக்கோட்டை வனச் சரகத்தில் மட்டும் 70 ஆயிரம் மரக்கன்று களும் வனத்துறை மத்திய நாற்றங்கால்  பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.  இவற்றின் 66 ஆயிரம் சிறிய பை மரக் கன்றுகள் விவசாயிகள் நிலங்களிலும், 4  ஆயிரம் பெரிய பை மரக்கன்றுகள் சமூக  அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், பொது அமைப்புகள், பொதுமக்கள் மூலம்  நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன்  முதல் கட்டமாக இன்று நூற்றுக்கணக் கான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன” என்றார்.  பின்னர் செருவாவிடுதி காப்புக்காடு பகுதியில் மரக்கன்றுகள் நட்டு நிகழ்ச்சியை  தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், வனக் காப்பாளர்கள், வேட்டை தடுப்புக் காவலர் கள், கிராம மக்கள், அரசுப் பள்ளி ஆசிரி யர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். பட்டுக்கோட்டை வனச்சரகத்துக் குட்பட்ட பகுதியில் தேக்கு, மகாகனி, செம் மரம், ஈட்டி, நீர்மருது, மகிழம், சொர்க்கம்,  குமிழ், பாதாம், உள்ளிட்ட 70 ஆயிரம் மரக் கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளன.