districts

திருச்சி ஜே.கே.நகரில் 20 ஆண்டாக பயன்படுத்தப்படும் பொதுச் சாலையை அடைக்க தனிநபர் முயற்சி

திருச்சிராப்பள்ளி, ஜூன் 21- திருச்சி காஜாமலை மற்றும் கே.கே.நகர் இடைப்பட்ட பகுதி யில் அமைந்துள்ளது ஜே.கே நகர். திருச்சி மாநகராட்சியின் 61 ஆவது வார்டில் அமைந்துள்ள இப்பகுதி, விதிமுறைகளின்படி மனைப்பிரிவு அங்கீகாரம் வழங்கப் பட்ட பகுதியாகும்.  இங்கு ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், குடிநீர் வடிகால் மற்றும் மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ரயில்வே, காவல் துறை அதிகாரிகள், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களும் வசித்து வருகின்றனர். மாநக ராட்சி சார்பில் இங்குள்ள அனைத்து தெருக்களுக்கும் சாலை வசதி செய்து தரப்பட்டு உள்ளது. புதைவடிகால் திட்டப் பணிகளும் நிறைவு பெற்று இணைப்புகள் மட்டும் இன்னும் வழங்கப்படவில்லை. திருச்சி ஜே.கே நகர் விரி வாக்க பகுதியில் உள்ள கோதா வரி தெருவையும், அதன் அரு கில் உள்ள லூர்து நகரையும் இணைக்கும் வகையில் தார்ச்சாலை  அமைக்கப்பட்டு கடந்த 20 ஆண்டு களுக்கு மேலாக பொதுமக்க ளின் பயன்பாட்டில் இருந்து வரு கிறது. ஜே.கே நகர் பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த முகமது நகர், ஆர்.எஸ்.புரம், திருமுருகன் நகர், ராஜகணபதி நகர், பாரதி நகர், ஆர்.வி.எஸ் நகர், காந்தி நகர் மற்றும் காஜாமலை, கே.கே நகர் பகுதி மக்களும் இந்த சாலை வழியாக புதுக்கோட்டை சாலை மற்றும் விமான நிலைய பகுதியை எளிதாக கடந்து செல்ல முடியும். இந்நிலையில், இந்த சாலை யில் தனி நபர் ஒருவர் பள்ளம் தோண்டி சிமெண்ட் தூண்களை ஊன்றி, சிலாப் கற்கள் மூலம் அடைக்க முற்பட்டார். இதனை யறிந்த ஜே.கே நகர் விரிவாக்க  பகுதி மக்கள் நலச் சங்கத்தினர்  திருச்சி விமான நிலைய காவல்  நிலையத்தில் புகார் செய்தனர். இதனை தொடர்ந்து விமான நிலையை போலீசார் உடனடியாக  சம்பவ இடத்திற்கு வந்து சாலையை ஆக்கிரமித்து கல்  நடும் பணியை தடுத்து நிறுத்தி னர். அப்போது சாலையை அடைக்க முயன்ற நபர் போலீசாரி டம், ‘தன்னுடைய பட்டா நிலத்தில்  மாநகராட்சி சாலை அமைத்து இருப்பதாக’ கூறினார். அதனை கண்டித்த போலீசார் பட்டா நிலமாகவே இருந்தாலும், 20 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள தார்ச்சாலையை திடீரென  மறித்து முடக்குவது தவறு. உங்களுக்கு அதில் உரிமை இருந் தால், அதற்கான ஆதாரங்களை நில அளவையர் மூலம் அளந்து  காட்டுங்கள். அதுவரை இந்த சாலையை மூடக் கூடாது. மூடி னால் சட்டரீதியான நடவடிக்கை எடுப்போம் என எச்சரித்தனர். இதனை தொடர்ந்து பள்ளம் தோண்டப்பட்ட சாலை சரி செய்யப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விடப் பட்டது. இந்நிலையில் பிரச்சனைக் குரிய இடத்தில் போலீசார் முன்னிலையில் சர்வேயர் மூலம் அளவீடு செய்யும் பணி நடை பெற்றது.  இதில் ஜே.கே.நகர்  விரிவாக்க பகுதி மக்கள் நலச்சங்க  நிர்வாகிகள் மற்றும் லூர்துநகர் பகுதி மக்கள் கலந்து கொண்ட னர்.  அப்போது ஏற்கனவே சாலைக்கு உரிமை கொண்டா டிய நபருக்கும், இன்னொரு மனையின் உரிமையாளருக்கும் இடையே நில பிரச்சனை இருப்பது தெரியவந்தது. இத னைத் தொடர்ந்து மனைப் பிரி வினை விற்பனை செய்த நபரிடம் முறையாக விசாரணை நடத்தி, அதன் பின்னர் சாலை உள்ள இடம் யாருக்கு சொந்தமானது என்பதை முடிவு செய்யலாம் என்றும், அதுவரை சாலையை யாரும் மூடக் கூடாது என்றும் கூறி போலீசார் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.