districts

இந்திய தகவல் தொழில்நுட்பக் கழக 5வது பட்டமளிப்பு விழா திருச்சியில் இன்று நடக்கிறது

திருச்சிராப்பள்ளி, ஆக.11-

      இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகம் திருச்சிராப்பள்ளியின் ஆளுநர்கள் குழு தலைவர் முனைவர் என்.வி.எஸ்.என்.சர்மா திருச்சியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது:

     திருச்சியில் உள்ள இந்திய தகவல் தொழில் நுட்பக் கழக ஐந்தாவது பட்டமளிப்பு விழா  சனிக்கிழமை (ஆக.12) காலை நடைபெறு கிறது. இவ்விழாவில், அனைத்து அக்னி ஏவு கணைகளிலும் பயன்படுத்தப்படும் நீண்ட தூர ஏவுகணை அமைப்புகளுக்கான வழி காட்டுதல் திட்டத்தை வடிவமைத்த விஞ்ஞானி டெசி தாமஸ் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்ட மளிக்க உள்ளார்.

    விழாவில், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையைச் சேர்ந்த ஒரு மாண வர் முனைவர் பட்டமும், வி.எல்.எஸ்.ஐ. சிஸ்டம் துறையைச் சேர்ந்த ஒரு மாணவர் முதுநிலை பட்டமும் பெற உள்ளனர்.

    மேலும் இந்நிறுவனத்தில் இளநிலை கல்வி பயின்ற 23 கணினி அறிவியல் மற்றும்  பொறியியல் துறை, 20 மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் துறை மாண வர்களுக்கு பட்டம் வழங்கப்பட உள்ளது. இதில் மாணவர்கள் நாக மல்லீஸ்வர் மற்றும்  பவன் கல்யாண் ஜடா ஆகிய இருவரும் தங்க ளின் துறைகளில் முதல் மதிப்பெண் பெற்ற தற்காக தங்கப் பதக்கம் பெற உள்ளனர்.

   மாணவர் நாக மல்லீஸ்வர் ‘பெருமைக் குரிய சிறந்த மாணவர்’ என்ற தங்கப்பதக்கத் தையும் பெற உள்ளார். இந்த ஆண்டு பட்டம்  பெரும் மாணவர்களில் 82 சதவீதம் பேர்,  ரூ.5.5 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான  வருடாந்திர சம்பளத்துடன் வேலையில் சேர  உள்ளனர்.

   இவ்வாறு அவர் கூறினார். பதிவாளர் சீதா ராமன் உடனிருந்தார்.