திருச்சிராப்பள்ளி, டிச.25 - 4 ஆவது ஆசிய ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவா மாநிலம் மனோகர் பாரிக்கர் உள்விளையாட்டு அரங்கத்தில் கடந்த டிச.16 முதல் 19 வரை நடை பெற்றன. இதில் ஆசிய நாடுகளான இந்தியா, இலங்கை, ஈரான், மியான்மர், நேபாளம், மலேசியா, ஓமன், பிலிப்பைன்ஸ், வியட்நாம் மற்றும் பூட்டான் ஆகிய 10 நாடுகள் பங்கேற் றன. இதன் இறுதிப் போட்டியில், ஆடவர் மற்றும் மகளிர் போட்டியில் இந்திய ரோல்பால் அணி ஈரான் அணியை எதிர்கொண்டது. ஆடவர் அணி 11 - 4 என்ற கோல் கணக்கில் ஈரான் அணியை வெற்றி பெற்றது. மகளிர் பிரிவில் இந்திய அணி, ஈரானை 3 - 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆசிய ரோல்பால் சாம்பி யன்ஷிப் போட்டியில் இந்திய அணி யில் இடம்பெற்று, இந்தியாவிற்கு தங்கம் வென்று தந்த, திருச்சி சாய்ஜி ரோல்பால் அகாடமியில் பயிற்சி பெற்ற திருச்சியைச் சேர்ந்த தங்கமங்கை வசிமா மற்றும் கடலூரைச் சேர்ந்த சிவச்சந்திரன் ஆகியோருக்கு ரோல்பால் அகாடமி நிர்வாகிகள், ரோல் பால் வீரர்கள், வீராங்கனைகள், பெற்றோர்கள், உறவினர்கள் என திரளானோர் பங்கேற்று, மாலை, சால்வை அணி வித்து செவ்வாயன்று சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து திருச்சி கே.கே.நகர் பேருந்து நிலையத்திலிருந்து, சாய்ஜி ரோல்பால் அகாடமி வரை யிலும் மேளதாளங்கள், வாண வேடிக்கை முழங்க திறந்த வாக னத்தில் தேசிய கொடியை போர்த்தியப்படி வீரர்கள் ஊர்வல மாக அழைத்து வரப்பட்டனர். பின்னர் திருச்சி கே.கே.நகர் சாய்ஜி ரோல் பால் பயிற்சி மைதா னத்தில் நடந்த பாராட்டு விழாவில், ஈஸ்வரி குரூப் ஆஃப் கம்பெனிஸ் கே.டி.எஸ். தென்னிந்திய ரோல்பால் சங்க செயலாளர் சுப்பிரமணியன், தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் ரோல்பால் சங்க தலைவர் செல்லமுத்து, செயலாளர் கோவிந்தராஜ், துணைத் தலைவர்கள் சரவணன், பிரேம்நாத், மாநில பொருளாளரும் இந்திய அணி பயிற்சியாளருமான ராஜசேகர், மாவட்டச் செயலாளர் மதுநிதா, பொருளாளர் காயத்ரி, சாய் ஜி ரோல்பால் ஸ்கேட்டிங் அகாடமி பயிற்சியாளர்கள், மாண வர்கள் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனையை பாராட்டி கௌ ரவித்தனர்.