புதுக்கோட்டை, டிச.27 - வேங்கை வயலில் தீண்டாமை கடை பிடிக்கப்படுவதாக தொடரப்பட்ட இரு வழக்குகளில், சிறப்பு அரசு வழக்கறி ஞரை நியமிக்கக் கோரி அந்த ஊரைச் சேர்ந்த பட்டியலின மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித் துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் பட்டியலின கிராமத்தில் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் கடந்த 2022 டிச.26 ஆம் தேதி தெரியவந்தது. இந்த வழக்கில், சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்ற னர். சம்பவம் தெரிய வந்த அடுத்த நாள் (டிச.27), அப்போதைய மாவட்ட ஆட்சி யர் கவிதா ராமு, மாவட்டக் காவல் கண்கா ணிப்பாளர் வந்திதா பாண்டே உள்ளிட் டோர் வேங்கைவயலுக்குச் சென்றனர். அப்போது, இறையூரிலுள்ள அய்யனார் கோவில் பட்டியலின மக்களை சாமி கும்பிட, கோவிலுக்குள் அனுமதிப்ப தில்லை என்றும், தேநீர்க் கடையில் இரட் டைக் குவளை முறை கடைபிடிக்கப் படுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரைத் தொடர்ந்து கோவி லுக்கும், தேநீர்க் கடைக்கும் ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட் டோரை கொண்ட குழுவினர் நேரில் சென் றனர். அப்போது கோவிலில் திடீரென சாமியாடிய சிங்கம்மாள் என்ற பெண், பட்டியலின மக்களை சாதியைச் சொல்லி திட்டியதாக புகார் எழுந்தது. மேலும், தேநீர்க் கடையில் கண்ணாடி டம்ளர் மற்றும் எவர்சில்வர் டம்ளர் இருப்பதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, வட்டாட்சியர் சக்திவேல் அளித்த புகாரில் தேநீர்க் கடைக்காரர் முத்தையா மற்றும் கோவி லில் சாமியாடிக் கொண்டு சாதியைச் சொல்லி திட்டிய சிங்கம்மாள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இவ்விரு வழக்கு களிலும் சிறப்பு அரசு வழக்கறிஞரை நிய மிக்க வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேங்கை வயல் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனர். வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவின்கீழ், வழக்கறிஞர்கள் த.பார் வேந்தன், சொ.மலர்மன்னன் ஆகியோரை இந்த வழக்கின் சிறப்பு வழக்கறிஞர்களாக நியமிக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இருமுறை இதே கோரிக் கையை முன்வைத்து மனு அளித்ததாக வும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் மீண்டும் செவ்வாய்க்கிழமை மனு அளித்ததாக வும் வேங்கைவயல் கிராம மக்கள் தெரி வித்தனர்.
வேங்கைவயலில் பாதுகாப்பு அதிகரிப்பு
வேங்கைவயல் பட்டியலின கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் கடந்த 2022 டிச.26 அன்று தெரியவந்தது. இச்சம்பவத்தில் தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடைபெற்று ஓராண்டு நிறைவடைந்தும் குற்றவாளியை இதுவரை கைது செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு இரு தரப்பினரிடமும் இருக்கிறது. இந்நிலையில், இப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே பாதுகாப்புப் பணியில் இருந்த 16 போலீசாருடன், மேலும் 35 போலீசார் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை அதிகாலை முதலே இறையூர், வேங்கைவயல் செல்லும் சாலைகளில் நிறுத்தப்பட்டுள்ள போலீசார், இயல்புநிலை திரும்பும் வரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம்
மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய ஒரு மாத கால அவகாசம் கேட்டு சிபிசிஐடி போலீசார் மாவட்ட எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க் கிழமை மனுத் தாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி எஸ். ஜெயந்தி, ஒரு மாத கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டார். குற்றவாளிகளை அடையாளம் காண்ப தில் தொடர்ந்து தொய்வு காணப்படுவதால் ஏற்கெனவே இதுபோல பலமுறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம் கேட்டுப் பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.