நாகர்கோவில்/ அருமனை, செப்.30- கன்னியாகுமரி மாவட்டம் முழு வதும் மழை நீடித்து வருகிறது. கடந்த வாரம் சாரல் மழையாக தொடங்கி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரு கிறது. இரண்டு நாட்கள் இடை வெளியில் மீண்டும் வெள்ளியன்று (செப்.29) அதிகாலை முதல் லேசான மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. நாகர்கோவில், மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை, மீனாட்சி புரம் சாலை, கோட்டார் சாலை, கேப் ரோட்டில் தண்ணீர் பெருக்கெ டுத்து ஓடியது. கோழிப்போர் விளை பகுதியில் அதிகபட்சமாக 65.6 மில்லி மீட்டர் மழை பதி வாகியுள்ளது.மாவட்டம் முழுவ தும் சனியன்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு: பேச்சிப் பாறை 29.8 மில்லி மீட்டர், பெருஞ்சாணி 30.4, சிற்றார் 1- 24.2, சிற்றார் 2- 26.4, பூதப்பாண்டி 20.2, களியல் 55.2, கன்னிமார் 29.4, கொட்டாரம் 31, குழித்துறை 4.2, மயிலாடி 19.4, நாகர்கோவில் 28.4, புத்தன்அணை 30, சுருளோடு 34.2, தக்கலை 41, குளச்சல் 32.6, இரணியல் 24, பாலமோர் 37.8, மாம்பழத்துறையாறு 26.8, திற்பரப்பு 52, ஆரல்வாய்மொழி 8.2, அடையாமடை 26.2, குருந் தன்கோடு 31.4, முள்ளங்கினா விளை 48.2, ஆணைகிடங்கு 27.4, முக்கடல் 18 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. தொடர் மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணையின் நீர் மட்டம் காலை 22.54 அடியாக இருந்தது. அணைக்கு 1109 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 333 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. பெருஞ்சானி அணை நீர்மட்டம் 43.50 அடியாக உள்ளது. அணைக்கு 629 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு 1 அணை நீர்மட்டம் 12.07 அடியாகவும், சிற்றாறு 2 அணை நீர்மட்டம் 12.17 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 9.30 அடியாகவும், மாம்பழத்துறை யாறு அணை நீர்மட்டம் 3.94 அடியாகவும் உள்ளது. திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகள் ஒரு பகுதி யில் மட்டும் குளிக்க அனு மதிக்கப்பட்டுள்ளனர். இதனால் குளிக்கின்ற சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் குளித்து திரும்புகி றார்கள். குமரி மாவட்டத்தை யொட்டியுள்ள திருவனந்தபுரம் மாவட்டத்திலும் தொடர்ந்து 5 நாள் மழை நீடிக்கும் என்ற வானிலை அறிவிப்பும் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள் ளது. இதுபோல் மாவட்டத்தின் எல்லையில் உள்ள மலையோர கிராமங்களில் மழை நீடிக்க வாய்ப்புள்ளது.