districts

img

கட்டுமாவடி மார்க்கெட்டில் மீன்களின் விலை உயர்வு

அறந்தாங்கி, டிச.21- தூத்துக்குடி, இராமநாத புரம் மாவட்டங்களிலிருந்து மீன்களின் வரத்து இல்லாத தால் கட்டுமாவடி மீன் மார்க் கெட்டில் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கட்டுமாவடியில் பெரிய மீன் மார்க்கெட் உள் ளது. இங்கு உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களிலி ருந்து சரக்கு வாகனங்கள் மூலம் மீன்கள் விற்பனைக்கு வருவது வாடிக்கையாகும். தமிழகத்தில் தற்போது வட கிழக்கு பருவமழை தீவிர மடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி,  இராமநாதபுரம் மாவட்டங்களில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டுள்ளது. இதனால் கடந்த ஒரு வாரமாக தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங் களிலிருந்து மீன்களின் வரத்து முற்றிலும் தடைபட்டது.  இதேபோன்று புதுக் கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெக தாப்பட்டினம்  விசைபடகு மீன வர்கள் கடலுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் மீன்கள் வரத்து இல்லை. நாட்டுப்படகு மீனவர்கள் கரையோரங்களில் மீன் பிடிப்பதால் குறைந்த அளவு மீன்கள் மட்டுமே விற்ப னைக்கு வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 170 முதல் 250 ரூபாய் வரை விற் கப்பட்ட இறால் விலை தற்போது 350 முதல் 400 ரூபாய் வரை விற்பனையா கிறது. இதேபோன்று பல வகையான மீன்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. மழை, வெள் ளம் குறைந்து மீனவர்கள் கடலுக்கு சென்றால் மட் டுமே மீன்களின் விலை குறைய வாய்ப்புள்ளது என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.