districts

img

பறவைகள் சரணாலயமான நஞ்சராயன் குளத்தில் உள்நாட்டு பறவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

திருப்பூர், மே 12-  திருப்பூர் நஞ்சராயன் குளத் தில் உள்நாட்டு பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருப்பூர் ஊத்துக்குளி சாலை சர்க்கார் பெரியபாளையம் கிராமத் தில் 440 ஏக்கர் பரப்பளவில் அமைந் துள்ளது நஞ்சராயன் குளம். விவ சாயத்திற்காக 1948ஆம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போதும் குளத் தைச் சுற்றியுள்ள பகுதி விவசாயி களுக்கு பயன்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் கால சூழலுக்கு ஏற்றவாறு வெளிநாட்டு பறவைக ளின் வருகை நஞ்சராயன் குளத் தில் அதிகரிக்கும். தமிழக அரசு  கடந்த 2022ஆம் ஆண்டு நஞ்சரா யன் குளத்தை 17ஆவது பறவை கள் சரணாலயமாக அறிவித்தது. பறவைகள் சரணாலயத்திற்கான பணிகளை மேற்கொள்ள முதற்கட் டமாக ரூ.7.5 கோடி நிதி ஒதுக்கப் பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அக்டோபர், நவம்பர் மாதங்க ளில் வலசை வந்த பறவைகள் மார்ச் மாதம் வரை இங்கு தங்கியி ருந்து தங்கள் தாய் நாட்டிற்கு திரும் பிச்சென்றது. தற்போது, உள்நாட்டு பறவைகளின் வருகை நஞ்சரா யன் குளத்தில் அதிகரித்துள்ளது. குறிப்பாக கூழைக்கிடா, புள்ளி மூக்கு வாத்து, நாமக்கோழி, சின்ன முக்குளிப்பான், நெடுங்கால் உள் ளான், மீன்கொத்தி, பாம்புதாரா, அருவாள் மூக்கன், மயில் உள் ளான், கருங்குறுகு, மஞ்சள்குறுகு உள்ளிட்ட பறவைகளின் வருகை தந்துள்ளது. அக்டோபர், நவம்பர் மாதங்க ளில் வெளிநாட்டு பறவைகளின் வருகையால் உள்நாட்டு பறவை கள் சாத்தான்குளம், வேடந்தாங் கல், கத்தாங்கண்ணி உள்ளிட்ட பகு திகளுக்கு வலசை சென்றது. வலசை வந்த வெளிநாட்டு பறவை கள் திரும்பிச் சென்றன. தற்போது  உள்நாட்டு பறவைகள் நஞ்சரா யன் குளத்திற்கு வந்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கோடை வெயி லின் தாக்கம் அதிக அளவு இருந்த தாலும் நஞ்சராயன் குளத்தில் தண்ணீர் வற்றாமல் உள்ளது. இதன்காரணமாக, பறவை கள் வசிப்பதற்கான சூழல் நிலவு வதால் வழக்கத்தை விட உள்நாட்டு  பறவைகளின் எண்ணிக்கை அதிக ரித்துள்ளது. பறவைகள் சரணால யமாக தமிழக அரசு அறிவித்ததன் காரணமாக மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால், பறவை களுக்கான இரை தட்டுப்பாடு இன்றி கிடைக்கிறது. நஞ்சராயன் குளத்தில் உள்ள திட்டு மேடுகள், முள் மரங்கள் இவற்றால் கூடு கட் டுவதற்கு வசதியாக உள்ளதால் பறவைகளின் விருப்ப இருப்பிட மாக நஞ்சராயன் குளம் மாறி வரு கிறது.