அறந்தாங்கி, ஜூன் 22-
புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கியில் நகர கூட்டுறவு வங்கி சுமார் 105 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அறந்தாங்கி நகரில் பெரியகடைவீதி பகுதி, பட்டுக்கோட்டை சாலை பகுதி ஆகிய இரண்டு கிளைகளுடன் இயங்கி வரும் இந்த வங்கியில் சுமார் 10,000க்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வங்கியில் வியாழனன்று சேலத்தில் இருந்து வந்திருந்த வருமானவரித் துறை அதி காரிகள் சுமார் 11 பேர் திடீர் சோதனை யில் ஈடுபட்டனர்.
துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்றது. எதற்காக வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாக வில்லை. தொடர்ந்து அதிகாரி கள் வங்கியின் ஆவணங்களை ஆய்வு செய்தனர்.