தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர் அருகே கரம்பத்தூரில் பகுதிநேர ரேசன் கடை திறப்பு விழா நடந்தது. அம்மாபேட்டை வடக்கு ஒன்றியச் செயலர் சுரேஷ் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றியத் தலைவர் கலைச்செல்வன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் முத்துச் செல்வம் கடையை திறந்து வைத்தார். இதில் பேரூராட்சித் தலைவி இலக்கியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.