districts

img

ஓசூரில் கால்நடைகளுக்கு பன்னோக்கு மருத்துவமனை திறப்பு

கிருஷ்ணகிரி,ஆக.21 -  ஓசூர் கால்நடை பரா மரிப்பு துறை சார்பாக பழைய கால்நடை மருத்துவமனை வளா கத்தில்  கட்டப்பட்ட கால்நடை பன்முக மருத்துவ மனையை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயி லாக திறந்து வைத்தார்.அதனைத் தொடர்ந்து ஓசூர் சாராட்சியர் பிரியங்கா, மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா ஆகி யோர் துவக்கி வைத்தனர். கிருஷ்ணகிரி கால்நடை  பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மருத்து வர் இளங்கோவன் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை இயக்குநர் மருத்து வர் சக்திவேல் பாண்டி, பிரதம மருத்துவர் ரவிச் சந்திரன்,ஓசூர் கோட்டை உதவி இயக்குனர் ஜோதி பாசு, மருத்துவர்கள் மோகன் ராஜ், செந்தில், அருணா ஐஸ்வர்யா கலந்து கொண்டனர்.