கும்பகோணம், டிச.18- தஞ்சாவூர் மாவட்டம் திரு விடைமருதூர் ஊராட்சி ஒன்றியம் திருநறையூர் ஊராட்சி துவக்கப் பள்ளியில், திருவிடைமருதூர் சட்ட மன்ற உறுப்பினர் கோவி. செழியன் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.27.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்ப றைகள் கட்டப்பட்டன. இந்த புதிய பள்ளி வகுப்பறை கட்டிடத்தை மயிலாடுதுறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம் திறந்து வைத்தார். திருவிடைமருதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக அரசு தலைமை கொற டாவுமான கோவி.செழியன், திருவிடை மருதூர் ஒன்றிய பெருந்தலைவர் சுபா. திரு நாவுக்கரசு, மாவட்ட கவுன்சிலர் சரவணன், ஜி.கே.எம்.ராஜா, திருவிடைமருதூர் ஊராட்சி மன்ற தலைவர் ரமா மணி, ஒன்றிய கவுன்சி லர் ஜெசிமா மன்சூர், கூகூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகாபதி மற்றும் அரசு அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.