districts

img

நாகை அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடங்கள் திறப்பு

நாகப்பட்டினம், ஜூன் 19- நாகப்பட்டினம் அரசு மருத்துவ மனையில் நடைபெற்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் நடைபெற்ற விழாவில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி பங்கேற்றார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூ.4.95 கோடி மதிப்பீட்டில் பொது சுகாதாரத்துறை சார்பில் புதிய கட்டடங்கள் மற்றும் நாகப் பட்டினம்  மருத்துவமனை வளாகத்தில் மறு சீரமைக்கப்பட்ட விபத்து பிரிவு மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடங்க ளை தமிழக மருத்துவம் -மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன்  திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ்,  நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் , கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி , தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத்தலைவர் என். கௌதமன்,  நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அமைச்சர் பேசுகையில், மருத்துவ மனை மூடப்பட்டதாக பரப்பிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நூறாண்டுகள் பழமை வாய்ந்த அரசு மருத்துவமனை 100 சதவீதம் முழுமையாக செயல்படும். மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே ஆகியவை உள்ளது. தற்போது சிடி ஸ்கேன், விரைவில் அமைக்கப்படும். இந்த மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவமனை மற்றும் குழந்தைகள் மருத்துவம் ஆகியவை இங்கு இயங்கிக் கொண்டிருக்கும்.  நாகப்பட்டினம் நகரத்தில் இயங்கி வந்த அரசு தலைமை மருத்துவமனை, புதி தாக ரூ.400 கோடி செலவில் கட்டப்பட்ட  ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டதை அடுத்து பல போராட்டங்கள் நடைபெற்றன, அதற்கு மறுப்பு தெரிவிக்கும் பொருட்டு இவ்விழா நடைபெற்றுள்ளது என்று தெரிவித்தார்.