மயிலாடுதுறை, மார்ச் 4 - மயிலாடுதுறை மாவட்டம் மன்னம் பந்தலில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.114 கோடியே 48 லட்சம் செலவில், தரைத் தளம் மற்றும் ஏழு தளங்களுடன் 2,82,883 சதுர அடி பரப்பளவில் மயிலாடு துறையில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்க ளன்று திறந்து வைத்தார். மேலும், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில், முடிவுற்ற 70 திட்டப் பணிகளை திறந்து வைத்து, 40 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறை களின் சார்பில் 12,653 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே. என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச் சந்திரன், ரகுபதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், டி.ஆர்.பி.ராஜா, மா.சுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன், கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் நாகைமாலி, தில்லி சிறப்புப் பிரதிநிதி விஜயன், நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார், முன்னாள் ஒன்றிய அமைச்சர் மணிசங்கர் அய்யர், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், முதன்மைச் செயலாளர் டாக்டர் சந்தரமோகன், செயலாளர் ராஜா ராமன், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதி கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். தரைத்தளம் இப்புதிய மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தின் தரைத்தளத்தில், காப்பறை, மாவட்ட கருவூல அலுவலகம், மக்கள் குறைதீர்ப்பு மனுக்கள் பெறும் அரங்கம், மைய ஆவணங்கள் காப்பகம், வருவாய் பதிவு அறை, சிறப்பு துணை ஆட்சியர் (சமூக சேவை திட்டம்), ஊடக அறை, மருந்தகம்/மருத்துவ காப்பீடு அலுவலகம், அஞ்சல் அலுவலகம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் மறு வாழ்வு அலுவலகம், மறுவாழ்வு மையம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
முதல், இரண்டாம் தளங்கள்
முதல் தளத்தில், மாவட்ட ஆட்சியர் அறை, மாவட்ட வருவாய் அலுவலகம், கூட்டரங்கம், சிறு கூட்டரங்கம், காணொலி காட்சி அறை, மாவட்ட ஆட்சியர் பொதுப்பிரிவு, வருவாய் பிரிவு, மாவட்ட வருவாய் அலுவலர் அறை, மாவட்ட ஆ ட்சியர் நேர்முக உதவியாளர், தலைமை சர்வேயர், தேசிய தகவல் மையம் மற்றும் இரண்டாம் தளத்தில், மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலகம், மாவட்ட சமூக நலத்துறை, மாவட்ட வழங்கல் அலுவல கம், தேர்தல் துறை, இந்திய நீர் சேவை பயிற்சி மையம், வருவாய் நீதிமன்ற தனித் துணை ஆட்சி சுரங்கங்கள், அலுவலக உதவி இயக்குநர், சிறு தொழில் அலுவல கம், சமூக மேம்பாட்டுக் குழு முதுகலை ஆராய்ச்சி மையம், சட்ட அலுவலகம், அனைத்து வருவாய் பிரிவுகள் அலுவ லகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
மூன்று, நான்காம் தளங்கள்
மூன்றாம் தளத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் அலுவலகம், உதவி இயக்கு நர், பஞ்சாயத்து அலுவலகம், கணக் காய்வு அலுவலகம், செயற்பொறியாளர் ஊரக வளர்ச்சி அலுவலகம், கலந்தாய்வு மாநாட்டுக் கூடம் மற்றும் நான்காம் தளத்தில், முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம், தலைமை நிர்வாக அதிகாரி, சிறு தொழில் கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், தலைமை கல்வி அலுவலகம், கூட்டரங்கம், வேளாண் வணிக விவசாய வியாபார அலுவலகம், பட்டுப்புழு வேளாண்மை அலுவலகம், வேளாண்மைத் துறை அலுவலகம் ஆகியவை அமைந்துள்ளன. ஐந்தாம் தளம் ஐந்தாம் தளத்தில், மருத்துவ அலுவ லகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மருத்துவ வாரியம், கூட்டு றவு அலுவலகம், மாவட்ட சமூக நலத் துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலுவல கம், புள்ளியியல் உதவி இயக்குநர் அலுவ லகம். குழந்தைகள் மாட்சிமை அதி காரி, பொதுப் பணித்துறை உதவி செயற் பொறியாளர் அலுவலகம், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் ஆகியவை உள்ளன.
ஆறாம் தளம்
ஆறாம் தளத்தில், மாவட்ட தொழி லாளர் அலுவலகம், தொழிலாளர் நீதி மன்றம், வீட்டு வசதி வாரிய அலுவல கம், பால் பண்ணை அலுவலகம், மாவட்ட தீயணைப்பு துறை, கால்நடை பராமரிப்பு அலுவலகம், பட்டுப்புழு வேளாண்மை அலுவலகம், செயற்பொறியாளர் வீட்டு வசதி வாரியம், போதைப்பொருள் கட்டுப் பாட்டு உதவி இயக்குநர், நிலம் மற்றும் நில அளவை பதிவு அலுவலகம், மாவட்ட மைய நூலகம், தமிழ்நாடு ஆதிதிரா விடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம், கூட்டரங்கம், உள்ளூர் திட்டமிடல் ஆணைய அலுவலகம், செயற்பொறி யாளர் அலுவலகம் ஆகியவை உள்ளன.
ஏழாம் தளம்
ஏழாம் தளத்தில், உணவு பாதுகாப்பு அலுவலகம், மின்சார அறை, ஆண்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள், ஆவின், சுற்றுலா அலுவலகம், தமிழ்நாடு நீர் வழங்கல் வடிகால் வாரியம், கூட்ட ரங்கம், கைத்தறி அலுவலகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 4 மின் தூக்கிகள், வாகன நிறுத்துமிடம், மழைநீர் வடிகால் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதி களும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. (ந.நி)
மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்தும் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பின்னர், புதிய திட்டங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரி வித்ததாவது: மயிலாடுதுறை நகராட்சிக்கு, 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நகராட்சி கட்டடம் கட்டப்படும். சீர்காழி வட்டம் பெருந்தோட்டம் கிராமத்தில் செல்லனாற்றின் குறுக்கிலும், சென்னம்பட்டினம் கிராமத்தில் முல்லை யாற்றின் குறுக்கிலும், தரங்கம்பாடி வட்டம் சந்திரப்பாடி கிராமத்தில் நண்டலாற்றின் குறுக்கிலும், உப்பு நீர் புகுவதை தடுக்கின்ற வகையில், கடைமடை நீர் ஒழுங்கிகள் 94 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். குத்தாலம் வட்டத்தில் வாணாதி ராஜபுரம் மற்றும் அரையபுரம் வாய்க்கால் பாசன உழ வர்கள் பயன்பெறுகின்ற வகையில், கட லங்குடி கிராமத்தில் 2 கோடியே ரூ.40 லட்சம் செலவில் புதிய படுக்கை அணை அமைக் கப்படும். மீனவ மக்களின் கோரிக்கைகள் மயிலாடுதுறை மாவட்டம் வாணகிரி மீன் இறங்குதளம் 30 கோடி ரூபாய் செல வில் மேம்படுத்தப்படும். நாகை மாவட்டம் செருதூர் வெள்ளையாறு முகத்துவாரத்தில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கரை பாது காப்புச் சுவர் அமைக்கப்படும். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில், 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும். அடுத்து, பூம்புகார் பகுதி மீனவர்கள் பயன்பெறும் வகையில், 2 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உலர்மீன் தயாரிக்கும் குழுமம் அமைக்கப் படும்.
அரசு கல்லூரிகளுக்கு மேஜை கணினிகள்
மென்பொருளுடன் ஒருங்கிணைந்த கற்றல் மேலாண்மை அமைப்பு திட்டத்தின் கீழ் திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப் பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களில் இருக்கின்ற 12 அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரிகள் மற்றும் மூன்று பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு 1642 மேசை கணிணிகள் மற்றும் கணினிசார் உபகரணங்கள் வழங்கப்படும். அதேபோல, மயிலாடுதுறை மாவட்டத் தில் ஒரு சிறப்பான நூலகம் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்திருந் தோம். அந்த அறிவிப்பை செயல்படுத்த “பார்க் அவென்யூ” பகுதியில் நிலம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. அங்கு 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு சிறப்பான நூலகம் விரைவில் கட்டி முடிக்கப்படும் இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.