தஞ்சாவூர், ஜூன் 12- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி டாக்டர் ஜே.சி. குமரப்பா பள்ளியில், மேல்நிலை முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா, செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளா ளர்கள் சங்க நிறுவனர் தலைவரும், குமரப்பா பள்ளி தாளாள ருமான முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர் தலைமை வகித்துப் பேசி னார். பள்ளி நிர்வாக இயக்குநர் எம்.நாகூர் பிச்சை, குமரப்பா அறக்கட்டளை பொருளாளரும், கல்விப் புல இயக்குந ருமான பொறியாளர் அஸ்வின் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறங்காவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், 11 ஆம் வகுப்பு சேர்க்கை பெற்ற மாணவ-மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக முதுகலை விலங்கியல் ஆசிரியை ஸ்ரீ தனலட்சுமி வரவேற்றார். முதுகலை ஆங்கில ஆசிரியை ரமாதேவி நன்றி கூறினார்.