districts

img

டி.கே.ரங்கராஜன் எம்.பி., நிதியில் கட்டப்பட்ட சமுதாயக் கூடம் திறப்பு

கும்பகோணம், செப்.27- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்  ஒன்றியத்திற்குட்பட்ட கொத்தங்குடி ஊராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாதர் சங்க ஒன்றியத் தலை வரும் கொத்தங்குடி முன்னாள் ஊராட்சி  மன்ற தலைவருமான வளர்மதி நாக ராஜன் பொறுப்பில் இருந்த போது 2013-2014 ஆம் ஆண்டு, சிபிஎம் எம்.பி.யாக இருந்த டி.கே.ரங்கராஜன் மாநி லங்களவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.40 லட்சம் செலவில் சமுதாயக் கூடம் கட்ட நிதி வழங்கப் பட்டது.  அதன் தொடர்ச்சியாக இதர அடிப் படை வசதிகளுக்காக ரூ.16.21 லட்சம் ஊராட்சி ஒன்றிய நிதியிலிருந்தும், 15 ஆவது நிதி குழு நிதியிலிருந்து ரூ. 33.29 லட்சம் என மொத்தம் ரூ.89.50 லட்சம் செலவில் கொத்தங்குடி ஊராட்சியில் சமுதாயக் கூட கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.  இந்த புதிய கட்டடத்தை முன்னாள்  மாநிலங்களவை உறுப்பினரும் சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினருமான டி.கே.  ரங்கராஜன் திறந்து வைத்தார்.  விழாவிற்கு மாநிலங்களவை உறுப்பினரும் தஞ்சை மாவட்ட திமுக செயலாளருமான கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். கும்பகோணம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் முன்னிலை வகித்தார். முன்னதாக கும்பகோணம் ஒன்றிய  பெருந்தலைவர் காயத்ரி அசோக்குமார்  வரவேற்றார். கும்பகோணம் ஒன்றிய  வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார்  ஒருங்கிணைத்தார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் சீனிவாசன், நீலமேகம், மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், மாவட்டக் குழு உறுப்பினர் ஜீவபாரதி, நாகராஜன், செயற்குழு உறுப்பினர்கள் சி.ஜெய பால்‌, தமிழ்ச்செல்வி, என்.வி கண்ணன்,  கும்பகோணம் ஒன்றியச் செயலாளர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கொத்தங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராஜலட்சுமி வீர பாண்டியன் நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக மணிமாறன்-சுவேதா என்ற மண மக்களுக்கு கட்சியின் முதுபெரும் தலை வர் டி.கே.ரங்கராஜன் திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்தினார்.