districts

img

புதிய வழித்தடங்களில் பேருந்து சேவை துவக்கம்

அரியலூர், பிப்.28 - அரியலூர் அருகேயுள்ள பொட்டவெளி மற்றும் மறவ னூர் கிராமங்களுக்கு புதன் கிழமை பேருந்து சேவை தொடக்கி வைக்கப்பட்டது. பொட்டவெளி கிராமத் தில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் கலந்து கொண்ட சட்ட பேரவை உறுப்பினர் கு. சின்னப்பா, அரியலூரில் இருந்து இலுப்பையூர், வெள்ளூர், பொட்டவெளி கிராமம் வழியாக செந் துறைக்கு பேருந்து சேவையை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் போக்கு வரத்துக் கழக திருச்சி கோட்ட மேலாளர் இராம நாதன், அரியலூர் கிளை மேலாளர் குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல், மறவனூர் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட சட்டப்பேரவை உறுப்பினர், அரியலூரில் இருந்து வாரணவாசி, ஜெ மின் ஆத்தூர், மறவனூர் வழி யாக திருமானூர், தஞ்சாவூ ருக்கு பேருந்து சேவையை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.