districts

img

தஞ்சாவூர் அருகே 15 அடி உயர திருவள்ளுவர் சிலை திறப்பு

தஞ்சாவூர், மார்ச் 30 -  தஞ்சாவூர் அருகே புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் வெள்ளாஞ் செட்டித் தெருவிலுள்ள தமிழ்த்தாய்க் கோட்டத்தில் தமிழ்த்தாய் அறக்கட்டளை  சார்பில் 15 அடி உயர திருவள்ளுவர் சிலை சனிக்கிழமை திறக்கப்பட்டது. இச்சிலையைப் புதுச்சேரி புதுவை தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி. முத்து திறந்து வைத்தார்.  இதுகுறித்து தமிழ்த்தாய் அறக் கட்டளைத் தலைவர் உடையார்கோ வில் குணா தெரிவிக்கையில், “ஆறு  அடி உயர பீடத்தில் 9 அடி உயர திரு வள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 15 அடி உயரம்  கொண்ட பிரம்மாண்டமான இச்சிலை,  மிகப்பெரிய கருங்கல்லால் உருவாக்கப் பட்டு 3 ஆயிரம் கிலோ எடையுடையது. இது, உலகின் இரண்டாவது மிகப் பெரிய கருங்கல்லில் செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலையாகப் போற்றப் படுகிறது. திருக்குறள் முதல் அடியில் 4 சீர்களைக் குறிக்கும் வகையில் சிலை யின் தலை முடி 4 முடிச்சுகளாகவும், இரண்டாவது அடியில் 3 சீர்களைக்  குறிக்கும் விதமாக தாடி 3 அடுக்கு களாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்சிலை கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடி கிருஷ்ணா சிற்பக் கூடத்தில் தயார் செய்யப்பட்டது” என்றார். விழாவில் மாரியம்மன் கோவில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தன சேகர், தஞ்சாவூர் கூட்டுப் பண்ணை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத் தலை வர் சு.கார்த்திகேயன், ஆய்வாளர் இராம.சம்பந்தமூர்த்தி, பாவலர் ப.கோ.  நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.