districts

அமைச்சர்கள் துவக்கி வைத்த தூர்வாரும் பணிகள் பாதியில் நிறுத்தம் விரைவில் முடிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

தஞ்சாவூர், மே 25-

     தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்று வரும்  தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தஞ்சையில் நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் சார்பில் வலியுறுத்தப் பட்டது.  

   தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலு வலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் (பொ)  கோ. பழனிவேல் தலைமையில தஞ்சை கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

     இக்கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் பேசுகையில், ‘‘பூதலூரில் உள்ள ஆனந்த காவேரி கால்வாயில் அமைச்சர்களால் தொடங்கி வைக்கப்பட்ட தூர்வாரும் பணிகள்  பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இதை விரை வாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் கிளை  வாய்க்கால்களில் மட்டுமே தூர் வாரப்பட்டுள் ளது. இதுபோல் முதன்மை வாய்க்கால்கள் அனைத்திலும் தூர்வார வேண்டும்’’ என்று  வலியுறுத்தினார்.

    இதேபோல் பல்வேறு விவசாயிகள் சங்க  நிர்வாகிகள் பேசுகையில், ‘‘பல இடங்க ளில் தூர்வாரும் பணிகள் பாதியில் நிறுத்தப் பட்டுள்ளன. எவ்வித முறைகேடும் இல்லா மல் அனைத்து பணிகளும் முடிக்கப்பட வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் 6 இடங்க ளில் மணல் குவாரி திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதில் 4 குவாரிகள் கல்ல ணைக்கு அருகில் உள்ளன. இதனால் கல்லணை கட்டுமானத்துக்கு பாதிப்பு ஏற்படும்  என்பதால் அவற்றை அனுமதிக்க கூடாது.  கோனேரிராஜபுரத்தில் சாகுபடி செய்வதற்கு  ஏதுவாக வாய்க்கால்களை தூர்வாரி குட முருட்டி ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

    குடமுருட்டி ஆற்றில் புதிதாக கட்டப்பட்டு உள்ள படுக்கை அணையின் உயரத்தை  குறைந்தது இரண்டடியாவது உயர்த்த வேண் டும். இந்த படுக்கை அணையால் திருத்துக் கால் கால்வாய், திருப்பந்துருத்தி கால்வாய், கண்டியூர் கால்வாய் போன்றவற்றிற்கு தண்ணீர் ஏறி பாய்வதற்கு வாய்ப்பு இல்லை. விவசாயிகள் சரியான அளவில் உரமிடும் வகையில், வேளாண் துறையினர் மண் பரிசோதனை செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என பேசினர்.