திருச்சிராப்பள்ளி, பிப்.1 - திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம், இனாம்குளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட சமத்துவபுரத்தில் அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, தெரு விளக்கு, கழிவறை, சமு தாயக்கூடம், ரேஷன் கடை, சுடுகாடு, இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகள் உள்ளிட்ட வைகளை சரி செய்திட கேட்டு தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தால் திருச்சி - திண்டுக்கல் சாலையில் வாலிபர் சங்கம், மாதர் சங்கம் சார்பில் சமைத்து உண்ணும் போராட்டம் திங்களன்று நடை பெற்றது. போராட்டத்திற்கு வாலிபர் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் ஏழுமலை தலைமை வகித் தார். இதில் மாநகர் மாவட்ட செயலாளர் லெனின், மாதர் சங்க மாவட்ட நிர்வாகிகள் ரேணுகா, சரஸ்வதி, சிஐடியு மாவட்ட நிர்வா கிகள் ஜெயபால், வேலுச்சாமி, சிபஎம் மணி கண்டம் ஒன்றிய செயலாளர் தங்கராஜ், வாலி பர் சங்க நிர்வாகிகள் கோகுல், சூர்யா, ஜெப்ரின் ஹரிஷ், தினேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத் திற்கு வந்த ஸ்ரீரங்கம் வட்டாட்சியர், ஜீய புரம் காவல் துணை கண்காணிப்பாளர், வட்டார வளர்ச்சி அதிகாரி, ராம்ஜி நகர் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட அரசு அதிகாரி கள் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கை களை உடனடியாக நிறைவேற்றக் கூடிய பணி களை இன்று முதல் துவங்குவதாகவும், மேலும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று கருத்துரு உருவாக்கப்பட்டு உடனடியாக மாவட்ட ஆட்சியரின் அனுமதி வாங்கி செய்து தருவதாக உறுதியளித்தனர். இதையடுத்து தற்காலிகமாக போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.