districts

வாலிபர் சங்கத்தில் இணைந்த இளைஞர்கள்

திருவாரூர், ஜூன் 10-

      திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம் சித்தாடி  கிராமத்தில் இந்திய ஐனநாயக வாலிபர் சங்கத்தில் புதி தாக 48 இளைஞர்கள் இணைந்தனர்.

     நிகழ்ச்சிக்கு சங்கத்தின் குடவாசல் ஒன்றியச் செய லாளர் கே.பகத்சிங் தலைமை வகித்தார். கிளை நிர்வாகி கள் அரவிந்த், சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்த னர். வாலிபர் சங்க கொடியை மாவட்டச் செயலாளர் ஏ.கே. வேலவன் ஏற்றி வைத்தார். மாவட்டத் தலைவர் எம்.எஸ். ஜெய்கிஷ், ஒன்றியத் தலைவர் பி.பகத்சிங், மாணவர்  சங்க ஒன்றிய துணைத்தலைவர் பி.சுகதேவ் ஆகியோர் சங்கத்தில் இணைந்த தோழர்களை வரவேற்று பேசினர்.  

     புதிய கிளை அமைக்கப்பட்டு 7 பேர் கொண்ட நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டு தலைவராக ஜனார்த்தனன், செய லாளராக அரவிந்த், பொருளாளராக சரண் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

      நிகழ்வில், போதைக்கு எதிராக ஒரு கோடி கையெ ழுத்து இயக்க நிறைவு நிகழ்ச்சிக்கு சித்தாடி கிளையில் இருந்து 25 பேர் கலந்து கொள்வது என்றும், மல்யுத்த வீரர்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த பாஜக எம்பி பிரஜ் பூசண் சரண் சிங்கை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.