திருச்சிராப்பள்ளி, ஜூன் 26 - தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர்கள் சங்க திருச்சி மாவட்ட 5 ஆவது மாநாடு எர குடி ஆர்.பி.எஸ்.மஹா லில் நடைபெற்றது. மாநாட்டு கொடியை பாலசுப்ரமணி யன் ஏற்றினார். மாநாட்டிற்கு சங்க மாவட்டத் தலைவர் கோ பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசா யிகள் சங்க மாவட்டச் செய லாளர் சிதம்பரம் துவக்க வுரையாற்றினார். வேலை யறிக்கையை பால் உற்பத்தி யாளர் சங்க மாவட்ட செய லாளர் ராமநாதன் வாசித்தார். வரவு – செலவு அறிக்கையை மாவட்ட பொருளாளர் குமார் சமர்ப்பித்தார். சங்க மாவட்ட துணைத் தலைவர் வரதராஜன், மாவட்ட துணை செயலாளர் தங்கராசு, மணப்பாறை தாலுகா செயலாளர் சீனிவா சன், விவசாயிகள் சங்க பொறுப்பாளர் சத்திய மூர்த்தி ஆகியோர் சிறப்புரை யாற்றினர். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில பொதுச் செயலா ளர் முகமதலி நிறைவுரை யாற்றினார்.
மாநாட்டில் புதிய நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவராக என். கோபாலகிருஷ்ணன், மாவட்டச் செயலாளராக பி. ராமநாதன், மாவட்டப் பொரு ளாளராக எஸ்.பாலசுப்பிர மணியன் உள்பட 16 பேர் கொண்ட மாவட்டக் குழுவும், 7 பேர் கொண்ட நிர்வாகக் குழுவும் தேர்வு செய்யப்பட் டது. பால் உற்பத்தியாளர் களுக்கு பசும் பால் லிட்டர் ரூ.32-லிருந்து ரூ.42-ம், எருமை பாலுக்கு ரூ.42 லிருந்து ரூ.52-ம் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். ஆவின் பால் கொள்முதல் அளவை உயர்த்த வேண்டும். கொள்முதல் செய்த பாலுக் கான தொகையை உடனே வழங்க வேண்டும். ஆரம்ப சங்கங்களில் பால் வாங்கும் இடத்திலேயே அளவு, சத்து, பால் விலையை குறித்து கொடுக்க வேண்டும். கால்நடை தீவனங்களை 50 சதவீத மானியத்தில் வழங்க வேண்டும். குழந் தைகள் சத்துணவு திட்டத் தில் ஆவின் பாலை சேர்த்து வழங்க வேண்டும். கறவை மாடுகளுக்கு வருடத்திற்கு இரண்டு முறை பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில் தடுப் பூசி செலுத்த வேண்டும். ஆரம்ப சங்க பணியாளர் களுக்கு சம்பளத்தை உயர்த்தி, சம்பள தொகை யினை ஆரம்ப சங்கம் 50 சத வீதம், ஆவின் நிர்வாகம் 50 சத வீதம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக உப்பிலிய புரம் ஒன்றியச் செயலாளர் முத்துகுமார் வரவேற்றார். விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் சேகர் நன்றி கூறி னார்.