விழுப்புரம், அக்.14- விழுப்புரம் மாவட்டத்தில் மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சரின் புதிய அறிவிப்பின் படி, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) 2022-23ஆம் நிதியாண்டிற்கு தாட்கோ திட்டம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினருக்கான பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் அமைக்க விழுப்புரம் மாவட்டத்தில் 2 சங்கம் அமைப்பதற்கு மட்டும் ரூ. 2 லட்சம் நிதி வழங்கப்படுவதற்கான அரசாணை வரப்பெற்றுள்ளது. இத்திட்டத்தின் நிபந்தனையாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருத்தல் வேண்டும், வயது வரம்பு 18 முதல் 65 வரையும், குடும்ப ஆண்டு வரு மானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமலும், சங்க உறுப்பினர் குறைந்தபட்சம் 1 கறவை மாடாவது வைத்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர், தாட்கோ திட்டத்தின் கீழ் மானியம் பெற்றிருந்தால் முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டம் தொடர்பான கூடுதல் தக வல்களை தெரிந்துகொள்ள மாவட்ட தாட்கோ மேலாளர் அலுவலகத்தை 04146-222863 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு பயன்பெறலாம் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.