கரூர், மே 13 -
கரூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத் தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 1,412 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
கரூர் மாவட்டத்தில் குளித்தலை நீதிமன்றம், கிருஷ் ணாபுரம், அரவக்குறிச்சி தாலுகா நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் கோப்பிற்கு எடுக்கப்பட்டு, மூன்று அமர்வுக ளில் மொத்தம் 1905 வழக்குகள் தேசிய மக்கள் நீதிமன்றத் தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 1412 வழக்கு களுக்கு தீர்வு காணப்பட்டது. வழக்குகளின் மொத்த மதிப்பு ரூ.4,53,20,172.
தேசிய மக்கள் நீதிமன்றத்தினை மாவட்ட நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம் துவக்கி வைத்து பேசினார். நீதிபதி கள், பார் அசோசியேசன், அட்வகேட் அசோசியேசன் நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், சட்ட தன்னார்வலர்கள் மற்றும் வழக்காடிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் நீதிபதி எம்.பாக்கியம் செய்தார்.