தஞ்சாவூர், ஜூன் 15-
சேதுபாவாசத்திரம் அருகே கடந்தாண்டு மாண வர்கள் இல்லாத நிலையில், மூடப்பட்ட அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி யில், இந்தாண்டு ஐந்து மாண வர்கள் சேர்ந்ததால், புதன் கிழமை பள்ளி மீண்டும் திறக் கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம், சேதுபாவாசத்தி ரம் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில், விளக்கு வெட் டிக்காடு கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் உள்ள ஊரா ட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில், கடந்தாண்டு மாண வர்கள் யாரும் சேராத நிலை யில், பள்ளி மூடப்பட்டது.
இதையடுத்து, பட்டுக் கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் திராவிட செல்வம், பெற்றோர் ஆசிரியர் சங் கத்தினர், ஆசிரியர்கள் முயற்சியினால், கிராமம் முழுவதும், அரசு பள்ளியில் பயின்றால், மாணவர் களுக்கு எதிர்காலத்தில் கிடைக்கும் சலுகைகள் குறித்து விளக்கப்பட்டது.
தொடர் முயற்சியின் கார ணமாக, ஏற்கனவே தனி யார் பள்ளியில் படித்த இரண்டு மாணவர்கள் உட் பட புதியதாக ஐந்து மாண வர்கள் பள்ளியில் சேர்ந்த னர்.
இதனால், மூடப்பட்ட பள்ளி மீண்டும் திறக்கப்பட் டது. புதிதாக சேர்ந்த மாண வர்களுக்கு புத்தகம், நோட்டு, புத்தகப்பை மற்றும் இனிப்பு கள் வழங்கப்பட்டன.
விழாவில், வட்டார கல்வி அலுவலர்கள் சிவசாமி, மீனா சுந்தரி, பெற்றோர் ஆசி ரியர் கழகத் தலைவர் காளி முத்து, இல்லம் தேடிக் கல்வி மைய ஆசிரியர் அபி, வட் டார வள மையம் மேற்பார் வையாளர் கென்னடி, கிராம பிரமுகர்கள் கண்ணன், சாமி நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொறுப்பு தலைமை ஆசிரியர் பரிமளா பெற்றோர்களுக்கும், கிராம மக்களுக்கும் நன்றி தெரி வித்து வகுப்புகளை துவக்கி னார். மேலும், கூடுதல் மாண வர்களை சேர்க்க ஏற்பாடு களை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.