districts

img

பாண்டிச்சேரி, சண்டிகர் மின் ஊழியர்களுக்கு ஆதரவாக அனைத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, பிப்.2 - பாண்டிச்சேரி, சண்டிகர்  உட்பட ஒன்பது யூனியன்  பிரதேசங்களில் செயல்ப டும் மின்சார வாரியங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் வகையில் ஒன்றிய அரசு  ஒப்பந்தம் ஏற்படுத்தி யுள்ளது. யூனியன் பிரதேச மின் வாரியங்களை தனியாரி டம் விடக்கூடாது. அரசுத் துறையாக நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலி யுறுத்தி பாண்டிச்சேரி, சண்டிகரில் மின்வாரிய ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவக்கியுள்ளனர்.  வேலை நிறுத்தத்தில் ஈடு படும் மின் ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகை யில் தமிழ்நாடு மின்சார  வாரியத்தில் உள்ள  அனைத்து தொழிற்சங்கங்க ளின் சார்பாக ஆதரவு ஆர்ப்பாட்டம் மின்வாரிய அலுவலகம் முன்பு நடை பெற்றது.  திருச்சி தென்னூரில் உள்ள மண்டல தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு பொறியாளர் கழகம், இன்ஜி னியர் சங்கம், ஐக்கிய தொழிலாளர் சங்கம், தொழி லாளர் முன்னேற்ற சங்கம், அண்ணா தொழிற்சங்க பேரவை, எம்பிளாய்ஸ் பெட ரேஷன் உள்ளிட்ட 10- க்கும் மேற்பட்ட தொழிற்சங் கங்கள் கலந்து கொண் டன. சிஐடியு மாவட்ட செய லாளர் ரெங்கராஜன் தலைமை வகித்தார்.

தஞ்சாவூர்
தஞ்சை மின்வாரிய மேற் பார்வை பொறியாளர் அலுவ லக வாயிலில், அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சம்மேளனம் (ஏஐடியுசி) மாநில துணைத்தலைவர் பொன்.தங்கவேலு தலைமை வகித்தார். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) மாநில துணைத் தலைவர் எஸ்.ராஜாராமன், மாவட்டச் செய லாளர் காணிக்கை ராஜ்,  பொருளாளர் ஆரோக்கிய சாமி, தொமுச மாவட்டத் தலைவர் பச்சமுத்து, ஐக்கிய சங்க மாவட்ட செயலாளர் ராகவன், அண்ணா தொழிற் சங்கம் முருகேசன், பொறி யாளர் கழகம் மாவட்டச் செயலாளர் மகாலிங்கம், ஓய்வு பெற்ற பொறியாளர் ஞானமனி மற்றும் மின் ஊழியர் மத்திய அமைப்பு மாவட்ட நிர்வாகிகள் உரை யாற்றினர். இதேபோல் கும்பகோணத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

கரூர்
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, ஏசிசிடி தமிழ்நாடு பவர் மின் பொ றியாளர் சங்கம், கணக்கீட்டு கணக்காளர் சங்கம் ஆகிய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொமுச கரூர் பேரவை செயலாளர் ரவி தலைமை வகித்தார். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சங்க மாவட்ட செயலாளர் க.தனபால், ஏஐ சிசிடியூ சங்க மாவட்ட செய லாளர் பால்ராஜ், பொறியா ளர் சங்க மாநில துணைத்  தலைவர் கோபால கிருஷ்ணன், தொமுச தலை வர் செல்வராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.