districts

img

செம்பனார்கோவில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு பூம்புகார் எம்எல்ஏ நிவேதாமுருகன் துவக்கி வைத்தார்

மயிலாடுதுறை, ஏப்.4 -  மயிலாடுதுறை மாவட் டம் செம்பனார்கோவில் கலைமகள் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி செம்பை ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர்  தலைமையில் நடைபெற்றது. பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் போட்டியை துவக்கி  வைத்து சிறப்புரையாற்றி னார். சிலம்பம், இரட்டை சிலம்பம், குத்துவரிசை, வாள்வீச்சு, சுருள்வாள், மான் கொம்பு, கட்டைக்கால் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய வீர விளையாட்டு போட்டிகள் நடந்த இந்நிகழ்ச்சியில் மயி லாடுதுறையை மாவட் டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங் கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள் மண்டல அள விலான போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.  நிகழ்ச்சியில், திமுக மாவட்ட பொருளாளர் ரவி, கலைமகள் கல்வி நிறுவன தாளாளர் நெடுஞ்செழியன், மருத்துவர் வீரபாண்டியன் மற்றும் பார்வையாளர்கள் சிலம்பாட்டத்தைக் கண்டு ரசித்தனர்.

;