மயிலாடுதுறை, பிப்.23 - கிறிஸ்தவத்தை பரப்புவதற்காக இந்தியா வந்து தமிழ் மொழிக்காக உழைத்து ஆசிய மொழிகளிலேயே தமிழை முதன் முதலாக காகிதத்தில் அச்சு இயந்திரம் மூலம் அச்சேற்றிய வரும், கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளை தமிழில் முதன் முதலாக வெளியிட்ட ஜெர்மனி நாட்டவரான தமிழறிஞருமான சீகன்பால்குவின் 303 ஆவது நினைவு தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. 1706 ஜூலை 09 அன்று நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடிக்கு கப்பல் மூலம் வந்தடைந்த சீகன்பால்குவுக்கு அப்போது வயது 24 தான். என்றா லும் ஜெர்மானியம், கிரேக்கம், எபிரே யம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழி களில் அதீத புலமைப் பெற்றிருந்த சீகன்பால்கு, மிக குறுகிய காலத்தி லேயே தமிழ் மொழியையும் கற்று, தமிழ றிஞராகவே மாறி தமிழின் பழம்பெ ரும் நூல்களான திருக்குறள், தொல் காப்பியம், ஆத்திச்சூடி உள்ளிட்ட நூல்களை பல மொழிகளில் மொழிப்பெ யர்த்து அச்சிட்டு வெளியிட்டு உலகறிய செய்தவர். சாதி, மத வேறுபாடுகளை உடைத் தெறிய பல்வேறு போராட்டங்களை தனது மனைவியுடன் செய்தவரான இவர்தான், ஆசிய கண்டத்திற்கே முதல் சீர்திருத்த கிறிஸ்தவ (புராட்ட ஸ்டாண்டு)போதகராவார். வெறும் 13 ஆண்டுகள் மட்டுமே தரங்கம்பாடியில் வாழ்ந்த சீகன்பால்கு கல்வி, கலாச் சாரம், சீர்திருத்தம், தமிழ் தொண்டு என பல புரட்சிகளை பல நூறு ஆண்டு களுக்கு முன்பே செய்தவர்.
1719 பிப்ர வரி 23 இல் தனது 37 ஆவது வயதில் தரங்கம்பாடியிலேயே இறந்து போன அவரின் உடல், அவரால் கட்டப்பட்ட ஆசியாவின் முதல் புராட்டஸ்டாண்டு தேவாலயமான புதிய எருசலேம் ஆல யத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் புதன்கிழமை அவரது நினைவு தினத்தையொட்டி புதிய எரு சலேம் ஆலயத்தில் சிறப்பு வழிபாடும், அவரது உடல் புதைக்கப்பட்ட இடத்தில் மலர் தூவி, மாலைகள் அணிவித்து மரி யாதை செய்யும் நிகழ்ச்சியும் நடை பெற்றது. பூம்புகார் சட்டமன்ற உறுப்பி னர் நிவேதா எம்.முருகன் சீகன்பால்கு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். ஆலயத்தின் சபைகுரு சாம்சன் மோசஸ், தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் ஆலோசனை சங்க உறுப்பினர் ஆயர் செல்லத்துரை, பொறையார் பெத்லேகம் ஆலய ஆயர் ஜான்சன் மான்சிங், பிஷப் ஜான்சன் மேல்நிலைப் பள்ளியின் தலைமை யாசிரியர் ஜான் சைமன், ஆக்கூர் ஆலய ஆயர் சார்லஸ் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சியின் புதிய கவுன்சிலர்கள், திருச்சபையினர், ஏராளமான கிறிஸ்த வர்கள், சுற்றுலா விரும்பிகள் கலந்து கொண்டனர். பின்னர் அங்கிருந்து பேரணியாக சென்று கடற்கரை சாலையில் உள்ள சீகன்பால்கு சிலைக்கும் மாலை அணி வித்து மரியாதை செய்தனர். சீகன்பால்கு வின் தமிழ் சேவையை போற்றும் வித மாக தமிழக அரசு விரைவில் அவருக்கு நினைவிடம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ உறுதியளித்தார்.