திருச்சிராப்பள்ளி, நவ.13- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாந கர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா திருச்சி மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: திருச்சி மாநகராட்சியில் 12 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வரு கின்றன. இதில் உறையூர், காட்டூர், சுப்ரமணி யபுரம், இ.பிரோடு, எடமலைப்பட்டிபுதூர் ஆகிய 5 இடங்களில் உள்ள மருத்துவமனை களில், கடந்த பல ஆண்டுகளாக தோல் நோய், பல் மருத்துவம், மனநோய் உள் ளிட்ட நோய்களுக்கு வெளியில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் சிறப்பு மருத்துவர் களை நியமித்து மருத்துவம் பார்க்கின்ற னர். மேலும், மேற்கண்ட ஐந்து ஆரம்ப சுகா தார நிலையங்களும் பாலி கிளினிக்கு களாக வாரத்தில் 6 நாட்களும் செயல்பட்டு வந்ததால், நோயாளிகள் சிறப்பு மருத்து வர்களிடம் காண்பித்து பயனடைந்து வந்த னர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் வெளியில் இருந்து வந்து பணி யாற்றும் மேற்கண்ட சிறப்பு மருத்து வர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரை ஊதியம் வழங்காத நிலையில், மேற்கண்ட 5 இடத்தில் பணி யாற்றும் சிறப்பு மருத்துவர்கள் கடந்த சில நாட்களாக பணிக்கு வருவதில்லை. எனவே இதில் உரிய முறையில் தலையிட்டு நிலுவை ஊதியத்தை வழங்கி மீண்டும் சிறப்பு மருத்துவ சேவையை வழங்கிட கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.