தஞ்சாவூர், மே 11-
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டத்தில் பசலி-1432-க்கான வருவாய் தீர்வாய கணக்குகள், முத லாம் நாள் தணிக்கை, பட்டுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலர் வீ.பிரபாகர் தலைமையிலும், பேராவூரணி வட்டாட்சியர் த.சுகுமார் முன்னிலையிலும் வியா ழக்கிழமை நடைபெற்றது.
இதில், பெருமகளூர் உள்வட்டத்திற்குட்பட்ட கிரா மங்களைச் சேர்ந்த பொது மக்களிடம் 58 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 20 மனுக்கள் ஏற்பு செய்யப்பட்டன. மேலும், 12 மனுக்களுக்கு உடன் தீர்வு காணப்பட்டு ஆணை களை வருவாய் கோட்டாட்சியர் வீ.பிரபாகர் வழங்கி னார்.
நிகழ்வில், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சி யரின் நேர்முக உதவியாளர் ப.அருள்ராஜ், பேராவூரணி வட்டாட்சியர் த.சுகுமார், தலைமை உதவியாளர் பிரேம்குமார், வட்டத்துணை ஆய்வாளர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.