திருச்சிராப்பள்ளி, ஏப்.11- ராணுவ நில விவகாரத்தால் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் பணிகள் நடை பெற்று வரும் அரிஸ்டோ மேம்பால பணி களை செவ்வாயன்று திருநாவுக்கரசர் எம்.பி., பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 7, 8 ஆண்டுகளாக மூடப்பட்டு கிடந்த இந்த அரிஸ்டோ மேம்பால பணிகள் தற்போது ஏறக்குறைய நிறைவு பெறும் நிலையில் உள்ளன. இதற்கு ஒத்துழைப்பு தந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜா சிங் மற்றும் ராணுவ இடத்துக்கு மாற்று இடம் தந்த தமிழக முதலமைச்சர், திட்டம் நிறைவேற முயற்சி மேற்கொண்ட அமைச்சர்கள் கே.என்.நேரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தற்போது இந்த பாலத்தில் வர்ணம் பூசுதல் மற்றும் மின் விளக்குகள் பொருத் தும் பணிகள் நடைபெற வேண்டியுள்ளது. இன்னும் 10 நாட்களில் இந்த பணிகள் நிறை வடையும். அதன் பின்னர் கலந்தாலோசித்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படும். ஆன்-லைன் சூதாட்டத்தால் பல பேர் தற்கொலை செய்தனர். இப்போது அவர் களின் உயிரை காப்பாற்றும் வகையில் மசோதா சட்டமாக்கப்பட்டுள்ளது. இரண் டாவது முறையாக சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்டு அனுப்பி வைத்த தீர்மா னத்தில் கையெழுத்திட்ட ஆளுநருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். நன்கு சட்டம் தெரிந்த நபராக ஆளுநர் இருக்கிற காரணத்தால், நிறுத்தி வைக் கப்பட்டுள்ள மசோதாக்களிலும் அவர் கையெழுத்திட வேண்டும். ஆளுநர் என்ப வர் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு பால மாக இருக்க வேண்டுமே தவிர, அதற்கு தடையாக இருக்கக் கூடாது. பெரும் பான்மை மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கம் எடுக்கும் முடிவுகளை நிறை வேற்ற ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.