districts

img

மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களில் உலகச் சுற்றுச்சூழல் தினம்

தஞ்சாவூர், ஜூன் 6-  

      தஞ்சாவூர் மருதுபாண்டி யர் கல்வி நிறுவனங்கள்- தஞ்சாவூர் வனக்கோட்டம்- வனச்சரகம் ஆகியோர் இணைந்து உலக சுற்றுச் சூழல் தின விழாவை மருது பாண்டியர் கல்வி நிறுவன வளாகத்தில் நடத்தினர்.

     விழாவிற்கு, மருது பாண்டியர் கல்வி நிறுவனங்  களின் தலைவர் கொ.மருது பாண்யன் தலைமை வகித்  தார். வனச்சரக அலுவலர் இரஞ்சித், வனவர் தி.இளஞ்  செழியன், மருதுபாண்டியர் கல்லூரி முதல்வர் மா. விஜயா, மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரி, முதல் வர் ப.சுப்பிரமணியன், துணை  முதல்வர் ரா.தங்கராஜ் ஆகி யோர் கலந்து கொண்டனர்.  

   தஞ்சாவூர் வனத்துறை சார்பாக வழங்கப்பட்ட 100 மரக்கன்றுகளை கல்லூரி மாணவ-மாணவிகள் நட்ட னர். நிகழ்விற்கான ஏற்பாடு களை கல்லூரி மேலாளர் இரா.கண்ணன் மற்றும் வனத்துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.

நாச்சியார்கோவில்

     நாச்சியார்கோவில் அரிமா சங்கம்-பசுமை சாரல் சார்பாக இயற்கை விவ சாயி அரிமா ராஜேந்திரன் இயற்கை விவசாய பண்  ணையில் புங்கன், வேங்கை,  மகாகனி, தேக்கு மரங்கள் நடப்பட்டது.

    நிகழ்வில் நாச்சியார்  கோயில் அரிமா சங்கத் தலை வர் பழனிவேல், செந்தில்  குமார், என்.பாலமுருகன், இயற்கை விவசாயி கலைச்செல்வி இயற்கை ஆர்வலர்கள் ராம்ஜி, பசுமை  எட்வின், க.கவியரசன் மற்  றும் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு மரங்களை நடவு செய்தார்கள்.