districts

img

கல்லீரல் மாற்று சிகிச்சையில் திருச்சி அப்போலோ மருத்துவமனை சாதனை

திருச்சிராப்பள்ளி, ஜூன் 29 - நமது உடலில் மிகப்பெரிய உறுப்பு கல்லீரல் தான். உடலில் உள்ள நச்சுப் பொருள்களை அகற்றுவது, செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தியை பாதுகாப்பது என மிக முக்கியமான பணிகளை செய்கிறது.  கல்லீரல் நோய் பாதிப்புகளை தீவிரப்  பாதிப்பு, நாள்பட்ட பாதிப்பு என இரண்டு முக்கிய வகைகளாக பிரிக்கலாம். இதில் தீவிர கல்லீரல் பாதிப்புகள் திடீரென ஏற்படக்  கூடியவை. அதேவேளையில் நாள்பட்ட பாதிப்புகள் உடல்பருமன், மதுப் பழக்கம்,  வைரஸ் தொற்றுகளால் ஏற்படக் கூடியவை.  

இவை ஏற்படுவதற்கு சில மாதங்கள் அல்லது ஆண்டுகள்கூட பிடிக்கலாம். நாள்பட்ட  கல்லீரல் பாதிப்புகள் வெளிப்பட காலம் பிடித்தாலும், பாதிப்பு ஏற்பட்ட பின்பு அவற்றின் தாக்கம் வெளிப்படையாகவும், அன்றாட வாழ்க்கையை பாதிக்கக் கூடியதா கவும் அமைகிறது.  இந்த பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சோர்வு, உடல், கண்களில் மஞ்சள் பூத்தி ருப்பது, சரும அரிப்பு, கால்கள் மற்றும் அடி வயிற்றில் வீக்கம், காரணமில்லாமல் எடை  குறைதல், எளிதில் காயமடைவது, சிறுநீர்  கருப்பாக செல்வது, மலம் வெளிறிய நிலை யில் இருத்தல் உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படும்.

ரத்தத்தில் நச்சுப் பொருள் களை அகற்றுவதில் கல்லீரலுக்கு சிரமம்  ஏற்படுவதால் இந்த அறிகுறிகள் தென்படு கின்றன.  இத்தகைய அறிகுறிகள் கல்லீரலில்  ஏற்பட்டுள்ள பாதிப்பையும், செயல்பட முடி யாத நிலையையும் வெளிப்படுத்துபவை என்பதால், உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது மிக மிக  அவசியம் என்று திருச்சி  அப்போலோ மருத்துவமனை யின் கல்லீரல் நோய் மற்றும் கல்லீரல் மாற்று சிகிச்சை நிபு ணர் குமரகுருபரன் தெரி வித்தார். அப்போலோ மருத்துவமனை கல்லீரல்  மாற்று சிகிச்சை தமிழ்நாடு தலைவர் இளங்குமரன் கூறுகையில், “‘கல்லீரல் நோய் பாதிப்பின் இறுதி நிலையில் உள்ள வர்களுக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.

உறுப்பு தானம் செய்வோரைப் பொருத்து இரண்டு  வகைகளில் மாற்று சிகிச்சை மேற்கொள்ளப் படுகிறது. உயிரிழந்தவரின் உறுப்பு (கடா வரிக்) அல்லது உயிருடன் இருப்பவரிடம் இருந்து பெறப்படுவது என இரண்டு வகை களில் கல்லீரல் பெறப்படுகிறது.   மாற்று சிகிச்சைக்கு எந்த அளவுக்கு உடனடி தேவை உள்ளது, தானம் அளிப்ப வர் தயாராக உள்ளாரா மற்றும் நோயாளி யின் இதர சூழல்கள் ஆகியவற்றைப் பொருத்து எந்த சிகிச்சை முறையை பின்பற்று வது என தேர்வு செய்யலாம்” என்றார்.

“கல்லீரல், கணைய, பித்தநாள விழிப்பு ணர்வு நிகழ்ச்சிகள் ஒன்றரை வருடத்திற்கு முன்பு துவங்கப்பட்டது. தற்போது வரை 2 குழந்தைகள் உள்பட 10 பேருக்கு கல்லீரல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டு அவர்கள் நல்ல உடல் நலத்து டன் உள்ளனர்” என்று அப்போலோ மருத்துவ மனையின் இரைப்பை குடல் அறுவை சிகிச்சை, கல்லீரல் மாற்று சிகிச்சை நிபுணர்  விஜய் கணேசன் தெரிவித்தார். திருச்சி அப்போலோ மருத்துவமனை கூடுதல் துணைத் தலைவர், பிரிவு தலைவர்  ஜெயராமன் வரவேற்றார். மருத்துவ நிர்வாக  அதிகாரி சிவம் நன்றி தெரிவித்தார்.