districts

img

பெண்களிடம் தகாத வார்த்தைகளில் பேசிய பாஜக பேரூராட்சி மன்ற தலைவர்

நாகர்கோவில், ஜூன் 9

       பெண்களிடம் தகாத வார்த்தைகளில் பேசிய வெள்ளிமலை பிஜேபி பேரூ ராட்சி மன்ற தலைவர் பால சுப்பிரமணியன் மீது உரிய நடவடிக்கை எடுத்தி ட மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கம் சார்பில்  வெள்ளிக்கிழமை புகார் கொடுக்கப்பட்டது.

    அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள பேரூராட்சிகளில் நகர்ப்புற வேலைத் திட்டத்தின் கீழ் நூறு நாள் வேலை கேட்டு மாநில அள வில் மனுக்கொடுக்கும் இயக் கங்கள் நடைபெற்று வரு கின்றன. அதன் ஒருபகுதி யாக குமரி மாவட்டத்தில் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளிமலை பேரூராட்சி யில் வேலை கேட்டு மனுக் கொடுக்கும் இயக்கம் வியா ழக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்றது. முறையாக காவல்  துறை அனுமதி பெற்று நடைபெற்ற இவ் இயக்கத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கணக் கான பெண்கள் வேலை கேட்டு மனுக்களுடன் பேரூ ராட்சி அலுவலகம் முன்பு திரண்டு இருந்தனர்.

     இந்நிலையில் இவ்வியக் கத்திற்கு தலைமை தாங்கிய வட்டாரத் தலைவர் விஜய குமார் மற்றும் மாவட்டத் தலைவர்கள், பேரூராட்சி மன்ற அலுவலகத்திற்குள் சென்று அங்கிருந்த செயல் அலுவலரிடம், அலுவல கத்தின் வெளியே கூடியி ருக்கும் பொதுமக்களிடமி ருந்து மனுக்களை பெற்றுக் கொள்ளுமாறும், அதன்மீது உரிய நடவடிக்கை எடுத்தி டவும் வலியுறுத்தி பேசி கொண்டிருந்தனர்.

    அப்போது பேரூராட்சி அலுவலகத்தில் இருந்த பேரூராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன் என்ப வர் அலுவலகத்தின் வெளியே வந்து அங்கு மனுக்களுடன் வந்திருந்த பெண்களிடம் அருவருக்க தக்க வார்த்தைகளில் பேசி தகாத முறையில் நடந்து கொண்டதுடன், பெண்களை அலுவலகத்திற்குள் மனுக் கொடுக்க வரவிடாமல் தடுத்து தகராறு செய்து கொண்டிருந்தார். அச்சம யம் அங்கு பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் பலமுறை தடுத்தும் பேரூ ராட்சி தலைவர் அத்துமீறி நடந்து கொண்டார். பேரூ ராட்சிமன்ற தலைவரின் நட வடிக்கையானது பெண்கள் மத்தியில் கடுமையான வேத னையையும், மன உளைச்ச லையும் ஏற்படுத்தி உள்ளது.

    மாநிலம் முழுவதும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பேரூராட்சிகளில் மனுக்கள் கொடுக்கும் இயக்கங்கள் அமைதியான முறையில் நடைபெற்று வருகின்றன. ஆனால் வெள்ளிமலை பேரூராட்சியில் நிர்வாகத் தில் இருந்து வரும் பாஜக வைச் சார்ந்த தலைவர் வேண்டு மென்றே திட்டமிட்டு அநாகரீகமான முறையில் நடந்து கொண்டுள்ளார்.

    எனவே  பெண்களிடம் அத்துமீறியும் தகாத முறை யிலும் நடந்து கொண்ட வெள்ளிமலை பேரூராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிர மணியன் மீது உரிய நடவ டிக்கை எடுத்திட வேண்டு மென்று அந்த புகாரில்  விதொச மாவட்டத் தலைவர் என்.எஸ்.கண்ணன் குறிப்பிட் டுள்ளார்.