districts

img

அனைத்து அரசு அலுவலகங்களிலும் விசாகா கமிட்டி அமைக்க வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 31 - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க  திருச்சி மாவட்ட மகளிர் மாநாடு திருச்சி யில் நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்க  மாவட்ட தலைவர் முனைவர் பால்பாண்டி தலைமை வகித்தார். திருச்சி சேவா சங்க தலைவர் சகுந்தலா  துவக்கவுரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலா ளர் பழனிச்சாமி, ஆசிரியர் சங்க ஆரோக்கியராஜ், ஹேமலதா ஆகியோர்  வாழ்த்துரை வழங்கினர். மாநாட்டில் பாரதிதாசன் பல்கலைக் கழக மகளிரியல் துறை இயக்குநர் பேராசிரியர் மணிமேகலை சிறப்புரை யாற்றினார். அனைத்து அரசு அலுவ லகங்களிலும் விசாகா கமிட்டி அமைக்க  வேண்டும். புகார் வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மகப் பேறு விடுப்பில் உள்ள பெண் ஊழியர் களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். பெண்களுக்கு அதிக ஆபத்தை உண்டாக்கும் ஆபாச வலை தளங்களை அரசு உடனே தடை செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில  துணைத்தலைவர் பெரியசாமி நிறை வுரையாற்றினார். முன்னதாக மாவட்ட இணைச் செயலாளர் அல்போன்ஸ் வரவேற்றார். மாவட்ட மகளிர் துணைக்  குழு இணை அமைப்பாளர் மேனகா தேவி நன்றி கூறினார்.