றுத்தல் பேராவூரணி, ஏப்.19-
விவசாயிகள் வேளாண் அடுக்குத் திட்டத்தில் பயன்பெற உரிய ஆவணங்களை வழங்கி பயன்பெறலாம் என பேராவூரணி வட்டாட்சியர் த.சுகுமார் தெரி வித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘தமிழ்நாடு அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், தமிழ்நாடு அரசின் அனைத்து திட்ட பயன்களையும் ஒற்றைச் சாளர முறையில் விவ சாயிகள் பெற வேளாண் அடுக்குத் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது
இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை நகல், ஸ்மார்ட் கார்டு நகல், தேசிய மயக்கமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தக நகல், பட்டா நகல், விவசாயிகளுடைய பாஸ்போர்ட் அளவு புகைப் படம், கைப்பேசி எண் உள்ளிட்ட ஆவணங்களுடன் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகத்தை அணுகி பதிவு செய்து பயன்பெறலாம்’’ எனத் தெரிவித்துள்ளார்.