மயிலாடுதுறை, நவ.26- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி டேனிஷ்கோட்டையில் உலக மரபு வார விழா நவம்பர்-19 அன்று துவங்கி ஒரு வாரம் நடைபெற்றது. விழாவையொட்டி டேனிஷ்கோட்டை யையும், கோட்டையில் பாதுகாக்கப்பட்டு வரும் பல நூற்றாண்டுகள் பழமையான டேனிஷ் இந்திய கலாச்சாரப் பொருட்கள், மன்னர் கால பத்திரங்கள் ஆகியவற்றை கட்ட ணமின்றி சுற்றுலா விரும்பிகள் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், வெள்ளியன்று உலக மரபு வார நிறைவு விழா நடைபெற்றது. தரங்கம் பாடி பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் பறையாட்டம், சிலம்பாட் டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளு டன் நடைபெற்ற விழாவை பார்வையா ளர்கள் கண்டுகளித்தனர். பின்பு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாண வர்களுக்கு கோட்டை காப்பாட்சியர், டேனிஷ்-இந்திய கலாச்சார மைய அலுவலர் கள் கேடயம், பரிசுகள், சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி பாராட்டினர்.