மன்னார்குடி, மே 10-
திருமக்கோட்டை மேம்படுத தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலியாக உள்ள 5 மருத்துவர் பணி யிடங்களை நிரப்ப பொது சுகாதார துறையும் மாவட்ட நிர்வாகமும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தி திருமக்கோட்டை மருத்துவ மனை எதிரில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க மாவட்டத் தலைவர் பவானி தலைமை வகித்தார். சிபிஎம் மூத்த தலைவர் என். இளங்கோவன், மாதர் சங்க ஒன்றியத் தலைவர் எம்.சுபா, செயலாளர் ஜே.தம யந்தி ஆகியோர் முன்னிலை வகித்த னர். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே.என்.முருகானந்தம், கே.தமிழ்மணி, ஒன்றிய கவுன்சில் உறுப்பினர் மாரியப்பன், வாலிபர் சங்க மணிகண்டன் உள்ளிட்டோர் பேசினர்.
மருத்துவமனையில் 5 மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன. உயிர்காக்கும் மருந்துகள் போதுமான அளவில் இல்லை. தேவையான ஊழி யர்கள் இல்லை. பாதுகாக்கப்பட்ட குடி நீர் தட்டுப்பாடு உள்ளது. பொதுப் பயன்பாட்டிற்கு கழிவறை இல்லை. எனவே, பொது சுகாதார துறையும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப் பட்டது.
இந்நிலையில், ஆதிச்சபுரம் வட்டார மருத்துவ அலுவலர் இலக்கியா தலை மையில் பேச்சுவார்த்தை நடைபெற் றது. இதில், சிபிஎம் மாவட்டச் செயற் குழு உறுப்பினர் கே.என்.முருகானந் தம், கே.தமிழ்மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பேச்சுவார்த்தையில், ஓரிரு நாட்க ளில் கோரிக்கைகள் நிறைவேற்றப் படும் என உறுதி அளித்ததன் பேரில் அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.