districts

பழைய பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துக! பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

பாபநாசம், மார்ச் 11 - மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும்,  பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான பேரா.  எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களை யும் அல்லலுக்கு ஆளாக்கிய அதிமுக ஆட்சிக்  காலத்தில், 1.4.2003 முதல் புதிய ஓய்வூதி யத் திட்டம் தமிழகத்தில் நடைமுறைப் படுத்தப்பட்டது. இதில் ஆறு லட்சம் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைக்கப்பட்டனர். இத்திட்டம் நடைமுறைக்கு வந்த நாளி லிருந்தே இதை எதிர்த்து அரசு ஊழியர்க ளும், ஆசிரியர்களும் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டம் 19 ஆண்டுகளாக நீண்டு வருகிறது. ஊழியர்களின் ஊதியத்தில் ஒரு பகுதியைப் பிடித்தம் செய்து, சூதாட்டத் தன்மைகள் கொண்ட பங்குச் சந்தையில் முதலீடு செய்து, பணி ஓய்வுக்குப் பிறகு கிடைக்கும் பயன்களுக்குப் பங்கம் விளை விப்பதாகவே (CPS Contributory Pension Scheme) அமைந்துள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டத்தில், பணிக் கொடை, ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு முதலிய எந்தப் பலன்களும் பணி ஓய்வுக்குப்  பிறகு கிடைக்காது என்பதால் அரசு ஊழியர் களும், ஆசிரியர்களும் பழைய பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி போராடி வருகின்றனர். மேற்குவங்கம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநில அரசுகள் புதிய ஓய்வூ தியத் திட்டத்தை ரத்து செய்துள்ளன. கேரள, தில்லி, ஆந்திர மாநிலங்களின் அரசுகள், வல்லுநர் குழுவின் அறிக்கையைப் பெற்று  பழைய பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை  நடைமுறைப்படுத்த உள்ளதாக அறிவித்துள் ளன. பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டி அரசு ஊழியர்க ளும், ஆசிரியர்களும் லட்சக்கணக்கான கையெழுத்துகளைத் திரட்டியுள்ளனர். அதை 25.3.2022 அன்று தமிழக முதலமைச்சரிடம் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் இந்த ஜீவாதாரக் கோரிக்கையைப் பரிசீலித்து, உடனடியாக பழைய பயனளிப்பு ஓய்வூதி யத் திட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப் பட ஆவன செய்து உதவிடுமாறு வலியுறுத்திக்  கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.