அருமனை, டிச.11- முழுக்கோடு ஊராட்சியில் வளர்ச்சிப் பணிகளுக்கு இடையூறு செய்துவரும் பாஜகவினரைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஞாயிறன்று (டிச.11) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றியம் முழுக்கோடு ஊராட்சி யில் தொடர்ச்சியாக சிபிஎம் வெற்றிபெற்று சிறப்பான நிர்வாகம் நடத்தி வருகிறது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத பாஜகவினர் ஊராட்சி பணிகளை செய்ய விடாமல் தடுப்பதும், பொய் பிரச்சாரம் நடத்தி மக்களை ஏமாற்றும் முயற்சியிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். இதனை கண்டித்து சிபிஎம் முழுக் கோடு ஊராட்சி கிளைகள் சார்பில் ஊராட்சி தலைவர் மரிய செல்விவிலாசினி தலைமை யில் புண்ணியம் சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் வட்டார செயலாளர் சசிகுமார், முன்னாள் துணைத் தலைவர் ரவீந்திரதாஸ், மேல்புறம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பேபி, ஊராட்சி உறுப்பி னர்கள் டேவிட், ஏஞ்சல் மற்றும் பொதுமக் கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.