districts

img

இலுப்பூர் தியாகி வி.கோவிந்தராஜ் நினைவு தின பொதுக்கூட்டம்

மயிலாடுதுறை, பிப்.9- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் இலுப்பூர் சங்கரன்பந்தல் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இலுப்பூர் தியாகி வி.கோவிந்தராஜின் 40 ஆவது  ஆண்டு நினைவு தின கட்சி நிதியளிப்பு பொதுக்கூட்டம் புதனன்று நடைபெற்றது.  ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். இலுப்பூர் கிளை செயலா ளர் என்.பாலகிருஷ்ணன் வரவேற்றார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் சிறப்புரையாற்றினார்.  மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின்,  எஸ்.துரைராஜ், டி.சிம்சன், ஜி.வெண்ணிலா, சி.விஜயகாந்த், மாவட்டக்குழு உறுப்பினர் காபிரியேல் ஆகியோர் உரையாற்றினர். இலுப்பூர் ஆர்.பிரகாஷ் நன்றி கூறினார். ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள், கிராம பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.  முன்னதாக கட்சி நிதியாக தரங்கம்பாடி ஒன்றியம் சார்பில் ரூ.2 லட்சத்து 2 ஆயிரத்து 500  இரண்டாவது தவணையாகவும், செம்பனார் கோவில் ஒன்றியம் சார்பில் ரூ.1 லட்சத்து 79 ஆயிரம் முதற்கட்ட தவணையாகவும் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜிடம் ஒன்றிய செயலாளர்கள் ஏ.ரவிச்சந்திரன், கே.பி.மார்க்ஸ் ஆகியோர் வழங்கினர்.